தமிழ்நாடு

tamil nadu

வைகை அணையிலிருந்து தண்ணீர் திறப்பு!

By

Published : Jun 23, 2021, 6:49 PM IST

வைகை அணையிலிருந்து தண்ணீர் திறப்பு
வைகை அணையிலிருந்து தண்ணீர் திறப்பு ()

ராமநாதபுரம்: மாவட்டத்தில் குடிதண்ணீர் தேவைக்காக வைகை அணையிலிருந்து தண்ணீர் திறந்துவிட தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.

இது குறித்து தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், "ராமநாதபுரம் மாவட்ட முன்னோடி விவசாயிகள், பரமக்குடி நகராட்சி ஆணையர், பரமக்குடி சட்டப்பேரவை உறுப்பினர் ஆகியோர் வைகை அணையிலிருந்து தண்ணீர் திறக்க கோரிக்கை வைத்தனர்.

அந்த கோரிக்கையை ஏற்று அலுவலர்கள் ஆலோசனை மேற்கொண்டனர்.

அதில் ராமநாதபுரம் மாவட்டத்தில் குடிதண்ணீர் தேவைக்காக வைகை அணையிலிருந்து இன்று (ஜுன்.23) முதல் 5 நாட்களுக்கு, 1,000 மில்லியன் கன அடி தண்ணீர் திறந்துவிட உத்தரவிடப்பட்டுள்ளது" என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: பராமரிப்பு பணிகளால் மின்தடை இருக்கிறது - அமைச்சர் செந்தில் பாலாஜி விளக்கம்

ABOUT THE AUTHOR

...view details