தமிழ்நாடு

tamil nadu

தமிழ்நாட்டில் புதிதாக 22 பேருக்கு கரோனா உறுதி

By

Published : Apr 8, 2022, 10:26 PM IST

தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 22 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளதாக பொது சுகாதாரத்துறை இயக்குநரகம் அறிவித்துள்ளது.

தமிழ்நாட்டில் 22 பேருக்கு கரோனா உறுதி
தமிழ்நாட்டில் 22 பேருக்கு கரோனா உறுதி

சென்னை:பொது சுகாதாரத்துறை இயக்குநரகம் ஏப்ரல் 8ஆம் தேதி வெளியிட்டுள்ள புள்ளி விவரத் தகவலில், 'தமிழ்நாட்டில் மேலும் புதிதாக 20 ஆயிரத்து 971 நபர்களுக்கு கரோனா வைரஸ் தொற்றுப்பாதிப்பு கண்டறிவதற்கான ஆர்டிபிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதன்மூலம் தமிழ்நாட்டில் மேலும் புதிதாக 22 நபர்களுக்கு கரோனா தொற்றுப் பாதிப்பு கணிக்கப்பட்டுள்ளது.

மேலும் தமிழ்நாட்டில் இதுவரை 6 கோடியே 46 லட்சத்து ஆயிரத்து 632 நபர்களுக்கு கரோனா வைரஸ் தொற்று கண்டறிவதற்கான பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதன் மூலம் தமிழ்நாட்டில் 34 லட்சத்து 53 ஆயிரத்து 33 நபர்கள் கரோனா வைரஸ் தொற்றுப் பாதிப்பிற்கு உள்ளாகி இருந்தனர் என்பது கண்டறியப்பட்டது.

அவர்களில் தற்போது மருத்துவமனைகள் மற்றும் தனிமைப்படுத்தும் மையங்களில் 237 பேர் சிகிச்சைப்பெற்று வருகின்றனர். மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்த நோயாளிகளில் குணமடைந்த 32 பேர் வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். இதனால் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 34 லட்சத்து 14 ஆயிரத்து 771 என உயர்ந்துள்ளது.

சென்னையில் புதிதாக 10 நபர்களுக்கும், செங்கல்பட்டு மற்றும் கோயம்புத்தூரில் தலா மூன்று நபர்களுக்கும், கடலூர், கன்னியாகுமரி, சிவகங்கை, தஞ்சாவூர், திருவள்ளூர், திருச்சி ஆகிய மாவட்டங்களில் தலா ஒரு நபர்களுக்கும் என 22 நபர்களுக்கு கரோனா தொற்றுப் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. 32 மாவட்டங்களில் புதிதாக யாருக்கும் வைரஸ் தொற்றுப் பாதிப்பு கண்டறியப்படவில்லை’ எனத்தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க:புதிய வகை கரோனா 'எக்ஸ்இ' பற்றி தெரிந்து கொள்ள வேண்டியவை

ABOUT THE AUTHOR

...view details