தமிழ்நாடு

tamil nadu

LGBTQ மக்கள் குறித்து தவறாக பேசியதாக பாரிசாலன் மீது ஜெஸ்ஸி அரோரா புகார்

By

Published : Jul 4, 2022, 9:56 PM IST

LGBTQ மக்கள் குறித்து பேசிய பாரிசாலன் மீது ஜெஸ்ஸி அரோரா பரபரப்பு புகார்!

LGBTQ மக்களை அவதூறாக பேசியதாகவும், பாரிசாலன் மீது நடவடிக்கை எடுக்கக்கோரியும் காவல் ஆணையர் அலுவலகத்தில் சமூக ஆர்வலர் ஜெஸ்ஸி அரோரா புகார் அளித்துள்ளார்.

சென்னை:ஐய்யப்பன்தாங்கலை சேர்ந்த சமூக ஆர்வலரும் திருநங்கையுமான ஜெஸ்ஸி அரோரா, காவல் ஆணையர் அலுவலகத்தில் பாரிசாலன் மீது புகார் ஒன்றை அளித்தார். இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர், “கடந்த வாரம் LGBTQ மக்களின் சுயமரியாதை பேரணி ஒன்று நடத்தப்பட்டது. அந்த பேரணியை திமுக எம்.பி தமிழச்சி தங்க பாண்டியன் தொடங்கி வைத்தார்.

இந்த பேரணியை தவறாக புரிந்து கொண்ட பாரிசாலன் என்பவர், செங்கோல் யூடியூப் சேனலில் LGBTQ மக்களை மிகவும் கொச்சையாக பேசியுள்ளார். மேலும் LGBTQ மக்களை மனநலம் பாதிக்கப்பட்டவர்கள் எனவும், சமுதாயத்துடன் சார்ந்து வாழ முடியாது என தனி மனித உரிமையை பறிக்கும் வகையில் பாரிசாலன் பேசியுள்ளார்.

LGBTQ மக்கள் குறித்து பேசிய பாரிசாலன் மீது ஜெஸ்ஸி அரோரா பரபரப்பு புகார்!

அரசு தங்களுக்கு பல உரிமைகள் வழங்கி இருப்பதை, சலுகைகள் என கொச்சைப்படுத்தியுள்ளார். இதனால் LGBTQ மக்களை அவதூறாக பேசிய பாரிசாலன் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளேன். LGBTQ மக்களுக்கு உதவி புரியவில்லை என்றாலும் பரவாயில்லை, அவர்களை சக மனிதனாக பார்க்க வேண்டும்” என தெரிவித்தார்.

இதையும் படிங்க:இரண்டாவது மனைவியை கொலை செய்த கணவர் கைது

ABOUT THE AUTHOR

...view details