தமிழ்நாடு

tamil nadu

காலை 11 மணி செய்தி சுருக்கம் - TOP TEN NEWS AT 11 AM

By

Published : Nov 21, 2021, 11:04 AM IST

ஈடிவி பாரத்தின் காலை 11 மணி செய்தி சுருக்கம்

1. Trichy SI Murder: திருச்சியில் காவல் உதவி ஆய்வாளர் வெட்டிக்கொலை

திருச்சி அருகே ஆடு திருடும் கும்பலை விரட்டி சென்ற, காவல் உதவி ஆய்வாளர் பூமிநாதன் (Trichy SI Murder) வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார்.

2. Karur Sexual Harassment: குழந்தைக்களுக்கு பாதுகாப்பான சூழல் இல்லை - ஜோதிமணி எம்.பி. ஆதங்கம்

குழந்தைகளுக்கு சமூகமாகவும், சட்டப்படியும் ஒரு பாதுகாப்பான சூழலை நாம் உருவாக்கவில்லை எனவும் பாலியல் குற்றங்களின் ஆணிவேரை அறுத்தெரிய தொடர்ந்து போராட வேண்டும் என கரூர் மாணவி தற்கொலை விவகாரத்தில் (Karur Sexual Harassment) ஜோதிமணி கருத்து தெரிவித்துள்ளார்.

3. ஆவணதாரர் பெயர் காட்சிப்படுத்த நடவடிக்கை - அரசாணை வெளியீடு

சார்பதிவாளர் அலுவலகங்களில் அடையாளவில்லை காட்சிக் கருவியில் (Token Display Unit) ஆவணதாரர் பெயரையும் காட்சிப்படுத்தும் முறையினை ரூ.3.40 கோடி செலவில் நடைமுறைப்படுத்த தமிழ்நாடு அரசு ஆணை வெளியிட்டுள்ளது.

4. அம்மா, கூட்டுறவு மருந்தகங்களில் ரூ.93.09 கோடிக்கு வர்த்தகம்; கூட்டுறவு சங்க பதிவாளர் பதில்!

அம்மா மருந்தகங்களை மூடவில்லை, மாறாக அவற்றுடன் கூட்டுறவு மருந்தகங்களையும் சேர்த்து இந்த ஆண்டு ரூ.93.09 கோடிக்கு வர்த்தகம் நடைபெற்றுள்ளது என கூட்டுறவு சங்க பதிவாளர் தெரிவித்துள்ளார்.

5. கைதி முன் விடுதலை உரிமை அல்ல - உயர் நீதிமன்றம் திட்டவட்டம்

ஆயுள் கைதிகளின் முன்கூட்டிய விடுதலை தொடர்பாக, அரசு விரைவில் சிறை விதிகளுக்கு உட்பட்டு பரிசீலித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

6. வீரப்பன் தேடுதல் வேட்டையின்போது பாதிக்கப்பட்ட மக்கள் நிவாரணம் வழங்க கோரிக்கை

அதிமுக (ADMK) ஆட்சியில் சந்தனக் கடத்தல் வீரப்பன் தேடுதல் வேட்டையின் போது தமிழ்நாடு-கர்நாடக கூட்டு அதிரடிப்படையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உரிய நிவாரணங்கள் வழங்க வேண்டுமென பாதிக்கப்பட்ட மக்கள் தரப்பிலிருந்து சென்னை தலைமைச் செயலகத்தில் மனு வழங்கினர்.

7. கோவை அருகே தெருக்களில் உலாவிய காட்டு யானைகள் - பதைபதைக்கும் சிசிடிவி காட்சி!

கோவை அருகே மலையடிவார பகுதியான பன்னிமடையில் காட்டு யானைகள் தெருக்களில் சர்வ சாதாரணமாக நடந்து சென்ற சிசிடிவி காட்சிகள் வெளியாகி காண்போரை பதைபதைக்கச் செய்துள்ளது.

8. Karur Girl Suicide: பாலியல் புகார் விசாரணையை தாமதித்த காவல் ஆய்வாளர் மீது நடவடிக்கை

கரூரில் பாலியல் தொல்லையால் பள்ளி மாணவி தற்கொலை விவகாரத்தில் காவல் ஆய்வாளர் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம் எஸ்பி நடவடிக்கை எடுத்துள்ளார் (Police Inspector change to Waiting list).

9. #18yearsofiyarkai காதல் திரைப்படங்களில் “இயற்கை”க்கு என்றுமே தனியிடம்!

இயற்கை படம் வெளியாகி இன்றோடு (21.11.2021) 18 ஆண்டுகள் நிறைவடைகிறது. இத்தனை ஆண்டுகள் கடந்தும் இப்படம் இன்றும் பேசப்பட்டு வரும் காரணம் குறித்து இக்கட்டுரையில் காண்போம்.

10. ஒளிகுறையா ரெட் டைமண்ட் ரஷ்மி

கரைசேர்க்கும் ஆழ்கடல் டால்பின்

ABOUT THE AUTHOR

...view details