தமிழ்நாடு

tamil nadu

மீண்டும் மழையா? வானிலை மையம் கொடுத்த ஷாக் அறிவிப்பு!

By ETV Bharat Tamil Nadu Team

Published : Dec 9, 2023, 5:41 PM IST

today weather report: தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய மாலத்தீவு பகுதிகளில் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி அடுத்த 24 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு பகுதியாக நிலவ கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் 14 ஆம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு
தமிழகத்தில் 14 ஆம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு

சென்னை :தமிழகம் புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் 14 ஆம் தேதி வரை லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக தென் மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.

மழைக்கு வாய்ப்புள்ள இடங்கள்: டிசம்பர் 10 மற்றும் 11 ஆகிய தேதிகளில் தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். இதைத் தொடர்ந்து, 12 ஆம் தேதி முதல் 14ஆம் தேதி வரை, தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் சார்பில் தெரிவிக்கபட்டுள்ளது.

வடகிழக்கு பருவமழை:கடந்த 24 மணி நேரத்தில் தென் தமிழகத்தில் அநேக இடங்களிலும், வட தமிழக உள் மாவட்டங்களில் ஒருசில இடங்களிலும், வடதமிழக கடலோர மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மழை பெய்துள்ளது. புதுச்சேரியில் லேசான மழை பதிவாகி உள்ளது. மேலும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலையானது நிலவியது.

கடந்த 24 மணிநேரத்தில், அதிகபட்சமாக நீலகிரி மாவட்டாத்தில் 12 சென்டி மீட்டர் மழையும், கோவை பீளமேடு பகுதியில், 11 சென்டி மீட்டர் மழையும் பதிவாகியுள்ளது. இதை தொடர்ந்து கோவை, திருப்பூர், மதுரை, திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, கடலூர் உள்ளிட்ட அநேக மாவட்டங்களிலும் மழை பெய்துள்ளது.

மேலும் வடகிழக்கு பருவமழையானது அக்டோபர் 1ஆம் தேதி முதல் டிசம்பர் 9ஆம் தேதி வரை 380.9 மி.மீ அளவு பதிவாகியுள்ளது. இந்த காலகட்டத்தில் இயல்பான மழை அளவு 391.0 மி.மீ அகும். ஆனால் இது இயல்பை விட 3 சதவிகிதம் குறைவானதாக பதிவாகியுள்ளது.

மேலும் தமிழக்த்தில் அரியலூர், கள்ளக்குறிச்சி, கிருஷ்ணகிரி, பெரம்பெலூர், திருவண்ணாமலை, திருச்சி, விழுப்புரம், வேலூர் உள்ளிட்ட சில மாவட்டங்களில் இயல்பான அளவை விட குறைவாகவே மழை பதிவாகியுள்ளது.

சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகள்:சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசானது / மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 32 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 25 டிகிரி செல்சியஸாகவும் இருக்கக்கூடும்.

அரபிக் கடல் பகுதி:தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய மாலத்தீவு பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இது அடுத்த 24 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு பகுதியாக நிலவ கூடும். மேலும், நாளை (டிச. 10) தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய லட்சத்தீவு, மாலத்தீவு பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும், இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். ஆகையால் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என தென் மண்டல வானிலை ஆய்வு மையம் சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: மிக்ஜாம் புயல் பாதிப்பு - ரேசன் அட்டைதாரர்களுக்கு ரூ.6 ஆயிரம் அறிவிப்பு - முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவு!

இதையும் படிங்க: கும்பக்கரை அருவியில் வெள்ளப்பெருக்கு.. சுற்றுலாப் பயணிகள் குளிக்க 37வது நாளாக தொடரும் தடை!

ABOUT THE AUTHOR

...view details