தமிழ்நாடு

tamil nadu

இன்ஸ்டாகிராம் காதலால் சிறுமிக்கு பாலியல் தொந்தரவு

By

Published : Jan 28, 2023, 6:47 AM IST

சென்னையில் இன்ஸ்டாகிராம் மூலம் பழகி 13 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த இளைஞர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார்.

இன்ஸ்டாகிராம் காதலால் சிறுமிக்கு பாலியல் தொந்தரவு!
இன்ஸ்டாகிராம் காதலால் சிறுமிக்கு பாலியல் தொந்தரவு!

சென்னையைச் சேர்ந்த பெண் ஒருவர் அவருடைய எல்லைப் பகுதிக்கு உட்பட்ட காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்தார். அந்த புகாரில், ‘13 வயதுடைய எனது மகள், அதே பகுதியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் 8ஆம் வகுப்பு படித்து வந்த நிலையில் அவரை காணவில்லை. உடனடியாக கண்டுபிடித்து தர வேண்டும்’ என கூறியிருந்தார்.

இந்த புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர், சிறுமியின் செல்போன் டவர் மூலமாக விசாரணையை தொடங்கினர். அப்போது மகாபலிபுரம் அருகே சிக்னல் காட்டியுள்ளது. இதனையடுத்து நேற்றைய முன்தினம் (ஜன.26) மகாபலிபுரம் பகுதியில் உள்ள விடுதிகளை திடீரென காவல் துறையினர் சோதனை செய்தனர்.

அப்போது அங்கு சிறுமி இருப்பதை காவல் துறையினர் கண்டுபிடித்தனர். இதனையடுத்து தப்ப முயன்ற இளைஞரை பிடித்த காவல் துறையினர், பின்னர் காவல்நிலையம் அழைத்து வந்து விசாரணை நடத்தினர். அதில், பிடிபட்டவர் செங்கல்பட்டைச் சேர்ந்த 24 வயது இளைஞர் என்பது தெரிய வந்துள்ளது.

இன்ஸ்டாகிராம் மூலம் கடந்த ஒரு வருடமாக சிறுமியிடம் பழக்கம் ஏற்படுத்தி, நாளடைவில் காதலாக மாறி, பின்னர் மகாபலிபுரம் அழைத்து வந்து சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்தது விசாரணையில் தெரிய வந்துள்ளது. அதேநேரம் சிறுமி தொடர்புடைய வழக்கு என்பதால், அருகில் உள்ள அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் வழக்கு ஒப்படைக்கப்பட்டது.

பின்னர் அனைத்து மகளிர் காவல் துறையினர் சிறுமியிடம் விசாரணை நடத்தினர். இதனையடுத்து பிடிபட்ட இளைஞர் மீது இந்திய தண்டனை சட்டம் 366இன் கீழ் கடத்தல் மற்றும் போக்சோ சட்டம் என 2 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. தொடர்ந்து இளைஞரை போக்சோ நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, புழல் சிறையில் அடைத்தனர்.

இதையும் படிங்க:பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக அக்கா மீது தங்கை போலீசில் புகார்!

ABOUT THE AUTHOR

...view details