சென்னை: நீலகிரி மாவட்டத்தைச் சேர்ந்த தனியார் பள்ளி ஆசிரியர் சாந்தி விஜய் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றை தொடர்ந்துள்ளார்.
அந்த வழக்கில், "எங்களது தனியார் பள்ளிக்கு அருகில் அரசுப் பள்ளிக்கு சொந்தமான 2.40 ஏக்கர் நிலத்தில் விளையாட்டு மைதானம் உள்ளது. அந்த மைதானத்தை அரசுப் பள்ளி மாணவர்களும், தனியார் பள்ளி மாணவர்களும் நேரக்கட்டுப்பாட்டின் அடிப்படையில் பயன்படுத்தலாம் என மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டிருந்தார். கரோனா காலகட்டத்தில் அந்த மைதானம் வணிக பயன்பாட்டிற்கு வந்து விட்டது. உழவர் சந்தை, பட்டாசுக் கடைகள் வைக்கப்பட்டன.
விளையாட்டு அல்லாத பல நிகழ்வுகள் அந்த மைதானத்தில் நடைபெற்றது. எனவே அதற்கு தடை விதிக்க வேண்டும். அந்த மைதானத்தை தனியார் பள்ளி மாணவர்களும் பயன்படுத்த அனுமதிக்க வேண்டும்" எனக் குறிப்பிட்டிருந்தார்.