சென்னை:தர்மபுரி மாவட்டத்தைச் சேர்ந்தவர் திவ்யஸ்ரீ (வயது 20). சென்னை வேப்பெரியில் உள்ள கால்நடை மருத்துவக் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு மருத்துவப் படிப்பு படித்து வந்தார். இந்த நிலையில் கடந்த ஒரு வருட காலமாக திவ்யஸ்ரீ கடுமையான மன அழுத்தத்தில் பாதிக்கப்பட்டதாகவும், இதற்காக சிகிச்சை பெற்று மருந்துகள் உட்கொண்டு வந்ததாகவும் கூறப்படுகிறது.
அதனைத் தொடர்ந்து, வழக்கம்போல் கல்லூரியை முடித்துக் கொண்டு விடுதியில் உள்ள அறைக்குச் சென்ற திவ்யஸ்ரீ, வெகு நேரமாகியும் கதவைத் திறக்கவில்லை எனக் கூறப்படுகிறது. இதனால் சக மாணவிகள் சந்தேகமடைந்து கதவைத் தட்டியுள்ளனர். அப்போது எந்தவித பதிலும் இல்லாததால், சந்தேகமடைந்த சக மாணவிகள், கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்துள்ளனர்.