தமிழ்நாடு

tamil nadu

சென்னையில் மருத்துவக் கல்லூரி மாணவி தற்கொலை! என்ன காரணம்?

By ETV Bharat Tamil Nadu Team

Published : Nov 5, 2023, 2:30 PM IST

Medical College Student Suicide : சென்னை வேப்பேரியில் உள்ள கல்லூரி விடுதியில் மருத்துவ மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Medical College Student Suicide
சென்னையில் மருத்துவக் கல்லூரி மாணவி தற்கொலை!

சென்னை:தர்மபுரி மாவட்டத்தைச் சேர்ந்தவர் திவ்யஸ்ரீ (வயது 20). சென்னை வேப்பெரியில் உள்ள கால்நடை மருத்துவக் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு மருத்துவப் படிப்பு படித்து வந்தார். இந்த நிலையில் கடந்த ஒரு வருட காலமாக திவ்யஸ்ரீ கடுமையான மன அழுத்தத்தில் பாதிக்கப்பட்டதாகவும், இதற்காக சிகிச்சை பெற்று மருந்துகள் உட்கொண்டு வந்ததாகவும் கூறப்படுகிறது.

அதனைத் தொடர்ந்து, வழக்கம்போல் கல்லூரியை முடித்துக் கொண்டு விடுதியில் உள்ள அறைக்குச் சென்ற திவ்யஸ்ரீ, வெகு நேரமாகியும் கதவைத் திறக்கவில்லை எனக் கூறப்படுகிறது. இதனால் சக மாணவிகள் சந்தேகமடைந்து கதவைத் தட்டியுள்ளனர். அப்போது எந்தவித பதிலும் இல்லாததால், சந்தேகமடைந்த சக மாணவிகள், கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்துள்ளனர்.

அப்போது திவ்யஸ்ரீ தற்கொலை செய்து கொண்டது தெரியவந்துள்ளது. இதனால் அதிர்ச்சி அடைந்த சக மாணவிகள், உடனடியாக இது குறித்து வேப்பேரி போலீசருக்கு தகவல் தெரிவித்து உள்ளனர். அந்த தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், மாணவியின் உடலை மீட்டு உடற்கூராய்விற்காக மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். மேலும் இந்த தற்கொலை சம்பவம் குறித்து, வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தற்கொலையை தவிர்க்கவும்

இதையும் படிங்க: அமைச்சர் எ.வ.வேலு தொடர்புடைய இடங்களில் தொடரும் வருமான வரி சோதனை! முக்கிய ஆவணங்கள் சிக்கியதா?

ABOUT THE AUTHOR

...view details