சென்னை:தமிழகம் முழுவதும் 8 மணல் குவாரிகள் உரிமையாளர்களின் கணக்கில் வராத பணம் 12 கோடியே 82 லட்ச ரூபாய் மற்றும் சொத்து ஆவணங்கள் முடக்கப்பட்டு உள்ளதாக அமலாக்கத்துறை அதிகாரிகள் தகவல் தெரிவித்து உள்ளனர்.சட்டவிரோத பண பரிமாற்ற வழக்கில் அமைச்சர் செந்தில் பாலாஜி, கைது செய்யப்பட்டு சிறையில் உள்ள நிலையில், அவருடன் தொடர்புடையவர்களின் இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர்.
அமைச்சர் செந்தில் பாலாஜி போக்குவரத்து துறை அமைச்சராக பணியாற்றிய காலத்தில், சட்டவிரோத பணப் பரிமாற்ற நடவடிக்கையில், அரசு ஊழியர்கள் தொடர்பில் இருந்தார்களா என்ற கோணத்தில் அவருடன் தொடர்புடையவர்கள் இல்லங்களில் சோதனைகள் நடைபெற்று வருவதாக அமலாக்கத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
கடந்த மூன்று நாட்களுக்கு மேலாக சென்னை, திண்டுக்கல், புதுக்கோட்டை, நாமக்கல், கரூர், கோவை உள்ளிட்ட 34 இடங்களில், மணல் குவாரி உரிமையாளர்கள், தொழிலதிபர்கள், ஓய்வு பெற்ற அரசு அதிகாரிகளின் வீடு, அலுவலகங்கள், மணல் குவாரி உள்ளிட்ட இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனையை மேற்கொண்டனர்.
தமிழகத்தில் 8 மணல் குவாரி தொடர்புடைய உரிமையாளர்கள் வீடுகள் மற்றும் அவர்களுக்கு சொந்தமான இடங்களில் அமலாக்கத்துறை சோதனை மேற்கொண்டது. திண்டுக்கல்லில் தொழிலதிபர் ரத்தினம் மற்றும் அவரது மைத்துனர் கோவிந்தன் தொடர்புடைய இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் (செப்.12) தேதி சோதனை நடத்தினர்.
இதையும் படிங்க:“ராஜீவ் காந்தி கொலை வழக்கில் முருகன் விடுதலை குறித்து எங்கள் கையில் ஏதுமில்லை” - அமைச்சர் ரகுபதி