தமிழ்நாடு

tamil nadu

முப்பெரும் விழாவிற்கு அழைப்பு விடுக்கும் ஸ்டாலின்!

By

Published : Sep 14, 2020, 6:27 PM IST

சென்னை: செப்டம்பர் 15 ஆம் தேதி அண்ணா அறிவாலயத்தில் உள்ள கலைஞர் அரங்கத்தில் முப்பெரும் விழா நடைபெறும் என திமுக தலைவர் ஸ்டாலின் தொண்டர்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில் தெரிவித்துள்ளார்.

dmk leader stalin says about party grand ceremony on september 15th
dmk leader stalin says about party grand ceremony on september 15th

இதுதொடர்பாக அவர் எழுதியுள்ள கடிதத்தில், "திராவிட இனத்தைச் சுயமரியாதை மிக்க அறிவுச் சமுதாயமாக மாற்றியமைத்த பெரியாரின் பிறந்தநாள் செப்டம்பர் 17, தாய்த்திருநாட்டிற்கு தமிழ்நாடு எனப் பெயர் சூட்டிய தலைமகனாக விளங்கிய அண்ணாவின் பிறந்தநாள் செப்டம்பர் 15, திராவிட முன்னேற்றக் கழகம் என்கிற பேரியக்கத்தை அண்ணா தோற்றுவித்த நாளும் செப்டம்பர் 17.

கொள்கைகளையும் லட்சியங்களையும் இதயத்தில் என்றும் ஏந்தி, நம் பொதுவாழ்வுப் பயணத்தைத் தொடர்ந்து நடத்திட இந்த மூன்று விழாக்களையும் இணைத்து, முப்பெரும் விழாவாக்கியவர் கருணாநிதி. இந்த ஆண்டும் முப்பெரும் விழாவினை, சிறப்பாக நடத்தித் தர உங்கள் அனைவரையும் கேட்டுக் கொள்கிறேன்.

வழக்கமாக, முப்பெரும் விழா தொண்டர்களின் பெருந்திரளான கூட்டத்துடன் நடைபெறும். கரோனா கால ஊரடங்கின் காரணமாக இம்முறை அந்த வாய்ப்பு அமையவில்லை என்றாலும், கொள்கைகளை எடுத்துரைக்கும் வாய்ப்பினை நாம் ஒருபோதும் தவற விடுவதில்லை.

ஊரடங்குக் கால விதிமுறைகளை மீறாமல், பாதுகாப்பும் தகுந்த இடைவெளியும் கொண்டுசெப்டம்பர் 15ஆம் தேதி அண்ணா அறிவாலயத்தில் உள்ள கலைஞர் அரங்கத்தில் முப்பெரும் விழா நடைபெறுகிறது.

இந்த முப்பெரும் விழாவுக்குக் கழகத்தின் பொதுச்செயலாளர் துரைமுருகன் தலைமையேற்கிறார். பொருளாளர் டி.ஆர். பாலு, முதன்மைச் செயலாளர் கே.என். நேரு, துணைப் பொதுச் செயலாளர்கள் வாழ்த்துரை வழங்குகிறார்கள்.

முப்பெரும் விழா என்றால் அதில் முத்தாய்ப்பாக அமைவது கழகத்தின் சார்பில் வழங்கப்படும் விருதுகள்தான். அந்த விருதுகளையும் பரிசுகளையும் வழங்கிச் சிறப்புரையாற்றும் பொறுப்பினை உங்களில் ஒருவனான எனக்கு வழங்கியிருக்கிறது தலைமைக் கழகம்.

ஒப்பற்ற கொள்கைகளை முழங்கிடும் முப்பெரும் விழாவின் மூலம், நமக்குக் கிடைக்கிற ஊக்கமும் உற்சாகமும், அடுத்தடுத்து நாம் சந்திக்கும் களங்களுக்கேற்ற வலிமையைத் தரக்கூடியவை.

பெரியார், அண்ணா, கருணாநிதி கட்டிக்காத்த இந்த இயக்கத்தையும் ஏற்றிப் போற்றிப் பாராட்டிடும், முப்பெரும் விழாவினைக் கண்டு களித்திட கருத்துகளைப் பெற்றிட அடுத்த களத்திற்குத் தயாராகிட, கரங்குவித்து வணங்கி, அன்புடன் அழைக்கிறேன் அனைவரும் வாரீர்" எனக் குறிப்பிட்டுள்ளார்

ABOUT THE AUTHOR

...view details