தமிழ்நாடு

tamil nadu

காலாவதியான தண்ணீர் பாட்டில்களை பறிமுதல் செய்த உணவுப் பாதுகாப்புத்துறை அலுவலர்கள்

By

Published : Nov 19, 2019, 9:04 PM IST

சென்னை: சுற்றுவட்டாரக் கடைகளில் விற்பனை செய்யப்பட்ட காலாவதியான தண்ணீர் பாட்டில்களை உணவுப் பாதுகாப்புத்துறை அலுவலர்கள் பறிமுதல் செய்தனர்.

காலாவதியான தண்ணீர் பாட்டில்களை பறிமுதல் செய்த உணவுப் பாதுகாப்புத்துறை அலுவலர்கள்


சென்னை தாம்பரம் மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் உள்ள கடைகளில் காலாவதியான தண்ணீர் பாட்டில்கள் விற்பனை செய்யப்படுவதாக உணவுப் பாதுகாப்புத்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இதைத்தொடர்ந்து, உணவுப் பாதுகாப்புத்துறை அலுவலர்கள் தாம்பரம் பகுதியில் உள்ள கடைகளில் சோதனை நடத்தினர். அப்போது அகஸ்தியர் தெருவில் உள்ள ஒரு கடையில், தனியார் நிறுவத்தின் தண்ணீர் பாட்டில்கள் காலாவதியானநிலையில் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. பின்னர் அந்த தண்ணீர் பாட்டில்களை அலுவலர்கள் பறிமுதல் செய்தனர்.

காலாவதியான தண்ணீர் பாட்டில்களை பறிமுதல் செய்த உணவுப் பாதுகாப்புத்துறை அலுவலர்கள்

இதனையடுத்து வேங்கடமங்கலத்தில் உள்ள தனியார் தண்ணீர் பாட்டில் நிறுவனத்தில் அலுவலர்கள் சோதனை செய்து அங்கிருந்த தண்ணீர் பாட்டில்களையும் பறிமுதல் செய்தனர்.

இதையும் படிங்க: குடிநீர் முறையாக வழங்க வேண்டும்’ - காலி குடங்களுடன் மனு அளித்த கிராம மக்கள்!

Intro:தாம்பரம் அருகே கெட்டு போன தண்ணீர் பாட்டிகள் விற்பதாக அப்பகுதி மக்கள் உணவு பாதுகாப்பு துறைக்கு அளித்த புகாரின் பேரில் முதற்பட்ட நடவடிக்கையாக 10க்கும் மேற்பட்ட தண்ணீர் பாட்டில்கள் பறிமுதல்Body:தாம்பரம் அருகே கெட்டு போன தண்ணீர் பாட்டிகள் விற்பதாக அப்பகுதி மக்கள் உணவு பாதுகாப்பு துறைக்கு அளித்த புகாரின் பேரில் முதற்பட்ட நடவடிக்கையாக 10க்கும் மேற்பட்ட தண்ணீர் பாட்டில்கள் பறிமுதல்.

சென்னை தாம்பரம் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் கெட்டுப்போனா தண்ணீர் பாட்டிகளை விற்பதாகவும் அகஸ்தியர் தெருவில் உள்ள கடைகளில் தனியார் நிறுவனத்திற்க்கு சொந்தமான கெட்டுபோன தண்ணீர் பாட்டில்கள் விற்பதாக அப்பகுதிமக்கள் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகளிடம் தகவல் தெரிவிக்கபட்டனர்.இதனையெடுத்து அதிகாரிகள் நடத்தபட்ட சோதனையில் முதற்கட்ட நடவடிக்கையாக நைஸ் அக்குவா (NICE AQUA) என்ற நிறுவனத்திற்க்கு சொந்தமான கெட்டுபோன 10க்கும் மேற்பட்ட தண்ணீர் பாட்டில்களை பறிமுதல் செய்தன்ர்.இந்த தண்ணீர் பாட்டில்கள் வேங்கடமங்கலத்தில் தயார் செய்யப்பட்டவை என தெரியவந்தது.மேலும் வேங்கடமங்கலத்தில் உள்ள தனியார் தண்ணீர் பாட்டில் தயாரிக்கும் நிறுவனத்தின் மீது உறிய சோதனை நடத்தப்பட்டு நடவடிக்கை எடுக்கபடும் என்று உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் கூறியுள்ளனர்.Conclusion:

ABOUT THE AUTHOR

...view details