தமிழ்நாடு

tamil nadu

‘சென்னையில் இதுவரை 90,794 மருத்துவ முகாம்கள் நடந்துள்ளன’- மாநகராட்சி நிர்வாகம்!

By

Published : Jan 7, 2021, 7:03 AM IST

சென்னை: கடந்தாண்டு மே மாதம் முதல் நேற்று (ஜன.7) வரை 90 ஆயிரத்து 794 மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டுள்ளன என மாநகராட்சி தெரிவித்துள்ளது.

சென்னையில் இதுவரை 90,794 மருத்துவ முகாம்கள் நடந்துள்ளது
சென்னையில் இதுவரை 90,794 மருத்துவ முகாம்கள் நடந்துள்ளது

சென்னையில் திருவிக நகர், அண்ணா நகர், அடையாறு போன்ற இடங்களில் கரோனா தொற்று சற்று அதிகமாக பரவி வருகிறது. இருப்பினும் குணமடைந்தவரின் சதவீதமும் அதற்கு சரி சமமாக உள்ளது.

இந்த நோய்த்தொற்றை குறைப்பதற்காக மாநகராட்சியும், சுகாதாரத் துறையும் தினமும் பொதுமக்களுக்கு முகக்கவசம் வழங்குவது, கபசுரக் குடிநீர் வழங்குவது போன்ற நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது.

அதன் ஒரு பகுதியாக தினமும் 15 மண்டலங்களிலும் மருத்துவ முகாம்கள் நடைபெற்று வருகின்றன. 2020 மே 8ஆம் தேதி முதல் நேற்று (ஜன.06) வரை மாநகராட்சி சார்பில் மொத்தம் 90 ஆயிரத்து 794 மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டுள்ளதாக மாநகராட்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது.

கரோனா பரிசோதனை முகாம்கள்:

அதில் 43 லட்சத்து 68 ஆயிரத்து 927 நபர்கள் பரிசோதிக்கப்பட்டுள்ளனர். சென்னையில் மொத்தம் 85 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் வாழ்ந்து வருகின்றனர். மொத்த மக்கள் தொகையில் 50 சதவீதத்திற்கும் மேற்பட்ட நபர்களுக்கு இந்த மருத்துவ முகாம்கள் மூலம் பரிசோதிக்கப்பட்டுள்ளன.

மேலும், நேற்று (ஜன.07) 347 மருத்துவ முகாம்கள் நடைபெற்றன. இதில், மொத்தம் 20 ஆயிரத்து 23 நபர்கள் பரிசோதிக்கப்பட்டனர். அதில் 216 பேருக்கு வைரஸ் பாதிப்பு அறிகுறி இருந்ததால் அருகில் உள்ள கரோனா பரிசோதனை மையத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.

மீதமுள்ள நபர்களுக்கு நோய்களுக்கு ஏற்ப மருந்து மாத்திரைகள் வழங்கப்பட்டன. அதிகபட்சமாக , அண்ணா நகரில் 38 மருத்துவ முகாம்களும், தண்டையார்பேட்டையில் 37 மருத்துவ முகாம்களும் நடைபெற்றது.

இதையும் படிங்க: சென்னை நட்சத்திர விடுதிகளில் பணிபுரியும் 114 நபர்களுக்கு கரோனா!

ABOUT THE AUTHOR

...view details