தமிழ்நாடு

tamil nadu

பெயர்ந்து விழுந்த மேற்கூரை: உயிர்தப்பிய தாய்-சேய்!

By

Published : Aug 21, 2021, 10:41 PM IST

roof fell down  gh labour ward roof fell down  chengalpattu gh  chengalpattu gh labour ward roof fell down  chengalpattu news  chengalpattu latest news  செங்கல்பட்டு செய்திகள்  செங்கல்பட்டு அரசு மருத்துவமனை  செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் பெயர்ந்து விழுந்த மேற்கூரை  பெயர்ந்து விழுந்த மேற்கூரை  மருத்துவமனையில் பெயர்ந்து விழுந்த மேற்கூரை

செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில், சிதிலமடைந்த கூரையிலிருந்து, சிமெண்ட் தாரை இடிந்து விழுந்ததில், குழந்தையும் தாயும் உயிர் தப்பினர்.

செங்கல்பட்டு: அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில், தாய்- சேய் நலப் பிரிவு இயங்கி வருகிறது. இதில், 50க்கும் மேற்பட்ட படுக்கைகள் உள்ளன. இங்கு, செங்கல்பட்டு மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் மட்டுமின்றி, அருகில் உள்ள மாவட்டங்களில் இருந்தும், பிரசவத்திற்காக அனுமதிக்கப்படுகின்றனர்.

பெயர்ந்து விழுந்த கூரை

இந்நிலையில், திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசியை அடுத்த எடப்பாளையம் பகுதியைச் சேர்ந்த தம்பதியினர், தனசேகரன்- லோகேஸ்வரி. லோகேஸ்வரிக்கு, கடந்த 19ஆம் தேதி, செங்கல்பட்டு மருத்துவமனையில் குழந்தை பிறந்தது.

பெயர்ந்து விழுந்த மேற்கூரை

தொடர்ந்து, தாய்- சேய் நலப் பிரிவில் லோகேஸ்வரியும் குழந்தையும் அனுமதிக்கப்பட்டிருந்தனர். இந்நிலையில், இன்று (ஆக.21) அதிகாலை, இவர்கள் இருந்த வார்டின் மேற்கூரை சிதிலமடைந்து, அதிலிருந்து சிமெண்ட் தரை பெயர்ந்து விழுந்தது.

இதில், லோகேஸ்வரியும் குழந்தையும் உயிர் தப்பினர். சம்பவம் குறித்து, மருத்துவமனை நிர்வாகம் விசாரணை மேற்கொண்டு வருகிறது. மேலும், அந்த வார்டில் இருந்த அனைவரையும், வேறு வார்டுக்கு மாற்றியுள்ளது.

இதையும் படிங்க: மதுபோதையில் இளைஞர் ரகளை அதிர்ச்சியில் மக்கள்

ABOUT THE AUTHOR

...view details