தமிழ்நாடு

tamil nadu

சென்னை ஓபன் மகளிர் இரட்டையர் பிரிவில் இந்திய இணை ஏமாற்றம் ...ஒட்டுமொத்தமாக வெளியேறிய இந்திய வீராங்கனைகள்

By

Published : Sep 16, 2022, 6:38 AM IST

Updated : Sep 16, 2022, 6:56 AM IST

Chennai Open tennis result upd
Chennai Open tennis result upd ()

சென்னை ஓபன் மகளிர் இரட்டையர் பிரிவில் இந்திய இணை ஏமாற்றம் அளித்தது. தொடரில் இருந்து ஒட்டுமொத்தமாக இந்திய வீராங்கனைகள் வெளியேறினர்.

சென்னை ஓபன் சர்வதேச மகளிர் டென்னிஸ் போட்டிகள் நுங்கம்பாக்கம் SDAT மைதானத்தில் நடைபெற்று வருகின்றன. நேற்று நடைபெற்ற இரட்டையர் பிரிவு காலிறுதி ஆட்டத்தில் இந்தியாவின் கர்மன் தண்டி, ருதுஜா போஷாலே ஜோடி, கனடாவின் தாப்ரோஸ்கி, பிரேசிலின் லூசியா ஸ்டேபனி ஜோடியுடன் மோதினர்.

முதல் செட்டில் இருந்தே ஆதிக்கம் செலுத்திய தாப்ரோஸ்கி, லூசியா ஸ்டேபனி ஜோடி, இந்திய இணையை 6-0, 6-3 என்ற புள்ளிக்கணக்கில் பதம் பார்த்தது.

இந்நிலையில் 2-0 என வீழ்ந்த கர்மன் தண்டி, ருதுஜா போஷாலே இணை சென்னை ஓபன் தொடரில் இருந்து வெளியேறினர்.

அதே சமயம் சென்டர் கோர்ட் மைதாத்தில் நடைபெற்ற ஒற்றையர் பிரிவு இரண்டாம் சுற்று ஆட்டங்களின் முடிவுகள் பின்வருமாறு

போட்டி 1: போலந்து வீராங்கனை மேக்டா லினெட் ரஷ்யாவின் செலேக்மெடேவா ஒக்சனாவை 6-2, 6-0 என்ற செட்களில் வெற்றி பெற்று காலிறுதிக்கு முன்னேறினார்.

போட்டி 2: ரஷ்யா வீராங்கனை அனஸ்டாசியா கசனோவாவை, ஜெர்மனியை சேர்ந்த கேட்டி ஸ்வான் 7-6, 6-2 என்ற செட் கணக்கில் வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறினார்

போட்டி 3: அர்ஜென்டினாவின் பொடோரோஸ்கா நதியா, ஜெர்மனியின் மரியா தட்ஜானாவை 6-3, 6-2, 7-6 என கைப்பற்றி டை பிரேக்கரில் 2-1 என்ற செட் கணக்கில் அபாரமாக வென்று காலிறுதிக்கு முன்னேறினார்.

போட்டி 4: ரஷ்யாவின் வரவரா கிரசேவா, கனடாவின் ஜாவோ கரோல்-ஐ 6-1, 7-5 என்ற செட்களில் வீழ்த்தி வென்று காலிறுதிக்கு முன்னேறினார்.

அதே போல இரட்டையர் பிரிவில் நடைபெற்ற காலிறுதி போட்டிகளில்;

• கேப்ரியேலா டப்ரோவ்ஸ்கி, லூயிசா ஸ்டெபானி இணை

• அன்னா பிளிங்கோவா, நடேலா டிசலமிட்ஸே இணை

• பேங்க்டிரன், மொயுகா உச்சிஜிமா இணை

• யூஜெனி பவுச்சார்ட், யானினா விக்மேயர் இணை

ஆகியோர் வெற்றி பெற்று, அரையிறுதி சுற்றுக்கு முன்னேறியுள்ளனர்.

பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட இந்திய வீராங்கனைகள் அடுத்தடுத்து தோல்வியுற்று, சென்னை ஓபன் மகளிர் டென்னிஸ் தொடரில் இருந்து வெளியேறியது ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை கொடுத்தாலும், சுவாரஸ்யமான போட்டிகளால் மற்ற நாட்டு வீராங்கனைகளுக்கான ஆதரவாளர்களாகவே மாறியுள்ளனர் சென்னை ரசிகர்கள்.

இன்றைய தினம் ஒற்றையர் பிரிவின் காலிறுதி சுற்றுகள் மற்றும் இரட்டையர் பிரிவின் அரையிறுதி ஆட்டமானது, இந்திய நேரப்படி மாலை 5 மணிக்கு தொடங்கவுள்ளன.

இன்று முதல் வார இறுதி நாட்கள் என்பதால், சென்னை ஓபன் கடைசி கட்டத்தை நெருங்கியுள்ள நிலையில், போட்டிகளை கான ரசிகர்கள் கூட்டம் அதிகரிக்கும் என எதிர்பார்க்க படுகிறது.

Last Updated :Sep 16, 2022, 6:56 AM IST

ABOUT THE AUTHOR

...view details