பிரபல தொலைக்காட்சி ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சி தொடங்கி 85 நாள்களைக் கடந்துள்ளது. இன்னும் நிகழ்ச்சி நிறைவடைய இரண்டு வாரங்கள் மட்டுமே உள்ள நிலையில் தற்போது பிக்பாஸ் வீட்டில் 10 நபர்கள் உள்ளனர்.
இதனையொட்டி நேற்று (டிசம்பர் 26) இரண்டு நபர்கள் போட்டியிலிருந்து வெளியேற்றப்பட இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி அக்ஷரா, வருண் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறுவதாகக் கமல் ஹாசன் அறிவித்தார்.