தமிழ்நாடு

tamil nadu

உடல் சூட்டைத் தணிக்க இதை குடியுங்கள்!

By

Published : Apr 4, 2019, 11:08 AM IST

Updated : Apr 4, 2019, 3:13 PM IST

season ()

உடல் சூட்டைத் தணித்து குளிர்ச்சித் தரக்கூடிய பாதாம் பிசின் மற்றும் சப்ஜா விதைகளை பயன்படுத்துவதன் மூலம் உடல் சூட்டை எளிதாக தணிக்கலாம். நாட்டு மருந்துக் கடைகளில் எளிதாக கிடைக்கும் இவற்றை பயன்படுத்தும் விதம் பற்றி இங்கு காண்போம்.

தற்போது கோடைகாலம் தொடங்கி உள்ளதால் மக்கள் அதிகப்படியான வெயில் காரணமாக அவதியுற்று வருகின்றனர். குறிப்பாக குழந்தைகள், கர்ப்பிணி பெண்கள், முதியவர்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்

பாதாம் பிசின்

கோடை காலத்திற்கு ஏற்றாற்போல் நாம் உணவு முறைகளை மாற்றிக்கொள்ள வேண்டும். உணவு வகைகளில் காரமான, புளிப்பான உணவுகளை தவிர்க்க வேண்டும். மேலும், கடைகளில் பாக்கெட்டுகளில் அடைக்கப்பட்டு விற்கப்படும் நொறுக்குத் தீனிகள், குளிர்பானங்கள் ஆகியவற்றைத் தவிர்ப்பது நல்லது.

உடலின் உஷ்ணத்தை குறைக்க தண்ணீர், பழங்கள், இளநீர், மோர், பழச்சாறுகள் ஆகியவற்றை பருக வேண்டும். இதைப்போலவே நாட்டு மருந்துக் கடைகளில் கிடைக்கும் பாதாம் பிசின் மற்றும் சப்ஜா விதைகள் உடல் சூட்டைத் தணித்து குளிர்ச்சியைத் தரக் கூடியவை.

பாதாம் பிசின்

பாதாம் பிசினை (கடல்பாசி என்றும் கூறுவார்கள்) இரண்டு நகக்கண் அளவு எடுத்து ஒரு பெரிய டம்ளர் தண்ணீரில் இரவில் போட்டு வைத்தால் காலையில் மொத்த நீரும் ஒரு ஜெல் போல மாறிவிடும் (இது ஜிகர்தண்டா செய்யவும்பயன்படுத்தப்படுகிறது).

பாதாம் பிசின்


இதை தண்ணீருடனோ அல்லது எந்த பழச்சாறு மற்றும்சர்பத்துடன்கலந்து அருந்தலாம்.

சப்ஜா விதை

கடுகு போல தோற்றமளிக்கும் சப்ஜா விதைகளை (பலூடா செய்ய இது பயன்படுத்தப்படுகிறது) சிறிது நேரம் நீரில் ஊற வைத்தால் அவை உப்பிவரும். பின்பு அதனை நாம் அருந்தும் சர்பத் அல்லது பழச்சாறுகளில் கலந்தால் ஜூஸ் ரெடியாகிவிடும்.

சப்ஜா விதை

மொத்தம் வெறும் 50-100 ரூபாய்க்கு இவற்றை வாங்கிக்கொண்டால் ஒரு நபருக்கு இந்த கோடைகாலம் முழுவதுக்கும் போதுமானது. எனவே, இவற்றைப் பருகி வெயிலிலிருந்து நம்மை பாதுகாத்துக்கொள்வோம்.

சப்ஜா விதை
Intro:Body:

கோடை வெயிலுக்கு இயற்கையின் கொடைகள்:-

------------------------------------------------------------

நாட்டு மருந்துக் கடைகளில் கிடைக்கும் பாதாம் பிசின் மற்றும் சப்ஜா விதை ஆகியவை உடல் சூட்டைத் தணித்து குளிர்ச்சியைத்தர வல்லவை. 



பாதாம் பிசினை இரண்டு நகக்கண் அளவு எடுத்து  ஒரு பெரிய டம்ளர் தண்ணீரில் இரவில் போட்டு வைத்தால் காலையில் மொத்த நீரும் ஒரு ஜெல் போல மாறிவிடும் (இது ஜிகர்தண்டா செய்ய பயன்படுத்தப்படுகிறது). இதை தண்ணீருடனோ அல்லது எந்த பழச்சாறு, சர்பத்துடனோ கலந்து நீங்கள் அருந்தலாம். 



அதைப்போன்று கடுகு போல தோற்றமளிக்கும் சப்ஜா விதைகளை (பலூடா செய்ய இது பயன்படுத்தப்படுகிறது) சிறிது நேரம் நீரில் ஊற வைத்தால் அவை உப்பி நாம் அருந்தும் சர்பத் அல்லது பழச்சாறுகளில் கலக்கவோ தயாராகிவிடும். 



மொத்தம் 50-100 ரூபாய்க்கு இவற்றை வாங்கிக்கொண்டால் ஒரு நபருக்கு இந்த கோடைகாலம் முழுவதுக்கும் போதுமானது.


Conclusion:
Last Updated :Apr 4, 2019, 3:13 PM IST

ABOUT THE AUTHOR

...view details