ஊரங்கு உத்தரவை அடுத்து மாநிலம் முழுவதும் மதுபானக்கடைகள் மூடப்பட்டுள்ளன. இதனால் மதுவுக்கு அடிமையான சிலர் கள்ளச்சாராயம் காய்ச்சுவதில் ஈடுபட்டுள்ளனர். குறிப்பாக திருநீர் மலையை ஒட்டியுள்ள கல்குவாரி, அடையாறு ஆற்றுப் பகுதிகள், ஆள் நடமட்டம் இல்லாத முள்வெளிப் பகுதிகள் என அங்கு சிலர் கள்ளச்சாராய ஊறல்களை பதுக்கியுள்ளனர்.
இதனையடுத்து தகவலறிந்த சங்கர் நகர் காவல் துறையினர், அப்பகுதியில் கள்ளச்சாராயம் காய்ச்ச முயன்ற 6 பேரைக் கைது செய்து சிறையில் அடைத்தனர். அதன்பிறகும், சிலர் சட்டவிரோத செயல்களில் ஈடுபடுவதாக வந்த தகவலையடுத்து தனிக்குழு அமைக்கப்பட்டு திருநீர் மலை மற்றும் அதன் சுற்றியுள்ளப் பகுதிகளில் காவல் துறையினர் தீவிரமாக கண்காணித்து வந்தனர்.