ETV Bharat / state

சென்னையில் அதிக விலைக்கு மதுபாட்டில்கள் விற்ற 4 பேர் கைது!

author img

By

Published : Apr 29, 2020, 12:33 PM IST

சென்னை: பல்லாவரம் அருகே கள்ளத்தனமாக மதுபாட்டில்களை அதிக விலைக்கு விற்றுவந்த நான்கு பேரைக் காவல் துறையினர் கைதுசெய்தனர்.

மது பாட்டில்கள் விற்றவர்கள்
மது பாட்டில்கள் விற்றவர்கள்

சென்னை பல்லாவரம் அருகே உள்ள பொழிச்சலூர் பகுதியில் அதிமுக முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர் தனுஷ் என்பவரது அலுவலகத்தில் வைத்து கள்ளத்தனமாக மதுபாட்டில்கள் விற்றுவருவதாக சங்கர் நகர் காவல் துறையினருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது.

இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்துசென்ற காவல் துறையினர், அங்கு 120 ரூபாய் மதிப்பிலான மதுபாட்டில்கள் 1200 ரூபாய்க்கு விற்றுவருவதை உறுதிசெய்தனர். இதையடுத்து அலுவலகத்தில் ஆய்வுசெய்ததில் அங்கு 33 மதுபாட்டில்கள் இருப்பதைக் கண்டறிந்தனர்.

மதுபாட்டில்கள் விற்ற அதிமுக முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர் தனுஷின் மகன் ஐயப்பன், இவரது கூட்டாளிகள் வசந்த், திவாகர், தங்கராஜ் ஆகியோரைக் காவல் துறையினர் கைதுசெய்தனர்.

மது பாட்டில்கள் விற்றவர்கள்
மது பாட்டில்கள் விற்றவர்கள்

இதையடுத்து அவர்களிடமிருந்து மதுபாட்டில்களையும், 44 ஆயிரம் ரொக்கப் பணத்தையும் காவல் துறையினர் பறிமுதல்செய்தனர்.

இதையும் படிங்க: வேலூரில் கள்ளச்சாராயம் விற்ற 3 பேர் கைது

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.