தமிழ்நாடு

tamil nadu

வருடாந்திர ஏவுகணை சோதனையை ஆய்வு செய்த வட கொரிய அதிபர்!

By

Published : Aug 21, 2023, 4:19 PM IST

கடற்படை கப்பலில் இருந்து வட கொரிய தலைவர் கிம் ஜாங் உன், க்ரூஸ் (strategic cruise missiles) ஏவுகணை சோதனையை ஆய்வு செய்வதாக வட கொரிய அரசு ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.

வருடாந்திர ஏவுகணை சோதனையை ஆய்வு செய்த வட கொரிய அதிபர்
வருடாந்திர ஏவுகணை சோதனையை ஆய்வு செய்த வட கொரிய அதிபர்

சியோல்:வட கொரியா, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளை அச்சுறுத்தும் வகையில் அவ்வப்போது ஏவுகணை சோதனைகளை நடத்தி வருகிறது. அந்த வகையில் கடற்படை கப்பலில் இருந்து வட கொரிய தலைவர் கிம் ஜாங் உன், க்ரூஸ் (strategic cruise missiles) ஏவுகணை சோதனையை ஆய்வு செய்வதாக வட கொரிய அரசு ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.

கிழக்கு கடற்கரையில், வட கொரிய தலைவர் கிம் ஜாங் உன் ஏவுகணை சோதனையை பார்ப்பதற்காகவும், மதிப்பாய்வு செய்யவும் ஒரு ரோந்து படகில் ஏறினார். அதன் பின்னர், கடற்படையினர் க்ரூஸ் ஏவுகணையை ஏவுவதற்கான பயிற்சிகள் நடைபெறுவதையும் பார்த்தார் என்று கொரியாவின் மத்திய செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. இது குறித்த புகைப்படத்தையும் வெளியிட்டுள்ளது.

அந்த புகைப்படத்தில், வட கொரியா தலைவர் ரோந்து படகில் இல்லாமல் வேறொரு இடத்தில் இருந்து ஏவுகணை ஏவுதலை கண்டது போல புகைப்படம் உள்ளது.மேலும் இந்த ஏவுகணை ஏவுதல் எப்போது நிகழ்ந்தது என்பது குறித்து (KCNA - Korean Central News Agency) கொரியாவின் மத்திய செய்தி நிறுவனம் தெரிவிக்கவில்லை.

இது குறித்து வட கொரிய தலைவர் கிம் ஜாங் உன், மிகவும் சக்தி வாய்ந்த போர்க்கப்பல்களை உருவாக்குவதற்கும், கடலுக்கடியில் ஆயுத அமைப்பை நவீனப்படுத்துதலுக்கும் இவ்வகையான முயற்சியை எடுத்து வருவதாக கூறியுள்ளார். கடந்த ஏப்ரல் மாதம் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் மற்றும் தென்கொரிய அதிபர் யூன் சுக் யோல் இருவரும் சந்தித்தபோது இருநாடுகள் இடையே பாதுகாப்பு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டன.

இதனிடையே கடந்த சில மாதங்களாக கொரிய தீபகற்பத்தில் அமெரிக்கா - தென்கொரிய படைகள் ராணுவப் பயிற்சிகளை மேற்கொண்டு வருகின்றன. இந்த அமெரிக்க மற்றும் தென் கொரிய இராணுவப் பயிற்சிக்கு எதிர்வினையாக வட கொரியா ஏவுகணை சோதனைகளை நடத்தும் என எதிர்பார்க்கப்பட்டது.

உல்ச்சி ஃப்ரீடம் ஷீல்ட் பயிற்சி (Ulchi Freedom Shield training) என்பது கணினி வழியிலான கட்டளை பயிற்சியாகும். 2022 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் இருந்தே வட கொரியா 100க்கும் மேற்பட்ட ஆயுத சோதனைகளை நடத்தியது. அவற்றில் சில அணுசக்தி திறன் கொண்ட பாலிஸ்டிக் ஏவுகணைகள் ஆகும்.

இவை அமெரிக்க மற்றும் அதன் நட்பு நாடுகளான தென்கொரியா மற்றும் ஜப்பான் உள்ளிட்ட நாடுகளை தாக்குவதற்காக வடிவமைக்கப்பட்டு உள்ளது. இதனிடையே கடந்த சில மாதங்களாக கொரிய தீபகற்பத்தில் அமெரிக்கா - தென்கொரிய படைகள் ராணுவப் பயிற்சிகளை மேற்கொண்டு வருகின்றன.

அடுத்தகட்டமாக மிகப்பெரிய ராணுவப் பயிற்சிகளை மேற்கொள்ள இருப்பதாகவும் கூறப்படுகிறது. மேலும் தங்களது வழக்கமான பயிற்சிகளையும் விரிவுபடுத்தியுள்ளன. கேம்ப் டேவிட்டில் நடந்த உச்சி மாநாட்டில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன், தென் கொரிய அதிபர் யூன் சுக் யோல் மற்றும் ஜப்பான் நாட்டு பிரதமர் ஃபுமியோ கிஷிடா ஆகியோர் கலந்து கொண்டனர்.

மேலும் இதுவே மூன்று நாடுகளும் இணைந்து நடத்திய முதல் உச்சி மாநாடாகும். இந்த மாநாட்டில் வட கொரியாவின் அணுசக்தி மற்றும் ஏவுகணை அச்சுறுத்தல்களை எதிர்கொள்ள மேம்பட்ட பாலிஸ்டிக் ஏவுகணை பாதுகாப்பு ஒத்துழைப்பைத் தொடர உறுதிபூண்டுள்ளதாக தலைவர்கள் தெரிவித்தனர்.

இதையும் படிங்க:எரிபொருள் ஏற்றிச் சென்ற பிக்-அப் வேன் - பயணிகள் பேருந்து மோதி கோர விபத்து.. 16 பேர் பலி!

ABOUT THE AUTHOR

...view details