தமிழ்நாடு

tamil nadu

ஒரே ஒரு வாக்கு பெற்ற பாஜக நிர்வாகி

By

Published : Oct 12, 2021, 4:40 PM IST

Updated : Oct 12, 2021, 7:52 PM IST

ஒரே ஒரு வாக்கு பெற்ற பாஜக உறுப்பினர்

கோயம்புத்தூரில் ஒரே ஒரு வாக்கு பெற்ற பாஜக நிர்வாகியின் நிலை, பரிதாபத்தில் ஆழ்த்தியுள்ளது.

கோயம்புத்தூர் மாவட்டத்தில் நடந்து முடிந்த ஊரக உள்ளாட்சித் தேர்தல் தொடர்பான வாக்கு எண்ணிக்கை இன்று நடந்தது.

இதில், திமுக அதிக இடங்களைக் கைப்பற்றியது. அதன் ஒரு பகுதியாக துடியலூர் அடுத்த குருடம்பாளையம் ஊராட்சியிலுள்ள 9ஆவது தொகுதியில், திமுக நிர்வாகி அருள்ராஜ், அதிமுக நிர்வாகி வைத்தியலிங்கம், பாஜக நிர்வாகி கார்த்திக், தேமுதிக நிர்வாகி ரவிக்குமார் உள்ளிட்டோர் சுயேச்சை வேட்பாளர்களாக இத்தேர்தலில் போட்டியிட்டனர்.

இதில் திமுக நிர்வாகி அருள்ராஜ் 387 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். அவருக்கு அடுத்ததாக சுயேச்சை வேட்பாளர் ஜெயராஜ் 240 வாக்குகளையும், அதிமுக நிர்வாகி வைத்தியலிங்கம் 196 வாக்குகளையும் பெற்றனர். இந்நிலையில், அந்தத் தொகுதியில் ஒரு சுவாரஸ்ய சம்பவம் நடந்துள்ளது.

இத்தேர்தலில் பாஜக நிர்வாகி கார்த்திக் என்பவர் சுயேச்சையாகப்போட்டியிட்டு, ஒரே ஒரு வாக்கு மட்டும் பெற்றுள்ளார்.

ஏனென்றால், கார்த்திக் குடும்பத்தில் அவரது மனைவி உள்பட மொத்தம் ஆறு பேர் உள்ள நிலையில், கார்த்திக் உட்பட ஆறு பேருக்கும் அவர் போட்டியிடும் வார்டில் வாக்கு இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க:திருப்பத்தூரில் வாக்குப் பெட்டிகள் உடைப்பு - மறு தேர்தல் நடத்தக்கோரி ஆட்சியரிடம் மனு

Last Updated :Oct 12, 2021, 7:52 PM IST

ABOUT THE AUTHOR

...view details