தமிழ்நாடு

tamil nadu

கோடநாடு வழக்கு மறுவிசாரணை நவ.26 க்கு ஒத்திவைப்பு - உதகை நீதிமன்றம்

By

Published : Oct 30, 2021, 7:08 AM IST

உதகை, நீலகிரி மாவட்டம்
தலைமை குற்றவியல் நீதிமன்றம், ()

கோடநாடு வழக்குகளில் கூடுதல் சாட்சியங்களை விசாரிக்க காவல்துறை அவகாசம் கேட்டதை தொடர்ந்து, வழக்கு நவ.26 ஆம் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டுள்ளது.

நீலகிரி:கோத்தகிரி அருகே கோடநாடு பகுதியில் ஜெயலலிதா, சசிகலாவுக்கு சொந்தமான தேயிலை எஸ்டேட் உள்ளது. இந்தத் தேயிலை எஸ்டேட் மற்றும் பங்களாவுக்குள் கடந்த 2017 ஏப்ரல் 23ஆம் தேதி நள்ளிரவு ஒரு கும்பல் புகுந்து காவலாளி ஓம்பகதூரை கொலை செய்தது. பின்னர், பங்களாவுக்குள் சென்று பல்வேறு பொருள்களை கொள்ளையடித்து சென்றது.

இந்தக் கொள்ளை, கொலைச் சம்பவங்களுக்கு மூளையாக செயல்பட்டதாக சயான், கனகராஜ் ஆகியோரைக் காவல்துறையினர் சந்தேகித்தனர். இந்நிலையில் கனகராஜ் கார் விபத்தில் உயிரிழந்தார். இந்த வழக்கு தொடர்பாக சயான், வாளையாறு மனோஜ் உள்பட 10 பேர் கைது செய்யப்பட்டு, அனைவரும் ஜாமீனில் உள்ளனர். வாளையார் மனோஜூக்கு யாரும் உத்தரவாதம் அளிக்காததால் அவர் குன்னூர் கிளைச் சிறையில் உள்ளார்.

நீதிமன்றத்தில் மறுவிசாரணை

இந்நிலையில், இந்த வழக்கின் திருப்புமுனையாக காவல்துறையினர் சயான் மற்றும் உயிரிழந்த கனகராஜின் சகோதரர் தனபாலிடம் மறு விசாரணை மேற்கொண்டனர். மேலும், குற்றஞ்சாட்டப்பட்ட ஜம்சீர் அலி, மனோஜ் சாமி, சந்தோஷ் சாமி, சதீசன், பிஜின் குட்டி ஆகியோரிடம் கூடுதல் விசாரணை நடத்தப்பட்டது.

இந்நிலையில், கோடநாடு கொலை மற்றும் கொள்ளை வழக்கு, நீலகிரி மாவட்டம் உதகையில் உள்ள மாவட்ட நீதிமன்றத்தில் நேற்று (அக்.29) விசாரணைக்கு வந்தது.

வழக்கு ஒத்திவைப்பு

விசாரணைக்கு சயான், வாளையாறு மனோஜ் மற்றும் உதயகுமார் ஆஜராகியிருந்தனர். அரசு தரப்பில் சிறப்பு வழக்கிறஞர் ஷாஜகான், அரசு வழக்கறிஞர் ஆனந்த் ஆஜராகினர்.

விசாரணை தொடங்கியதும் காவல்துறை மற்றும் அரசு வழக்கறிஞர்கள் மேல் விசாரணைக்கு நீண்ட அவகாசம் தேவை என வலியுறுத்தினர். அதன் பேரில், உதகை மாவட்ட அமர்வு நீதிமன்ற நீதிபதி சஞ்சய் பாபா வழக்கு விசாரணையை நவ. 26ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார்.

இதையும் படிங்க: நெருங்கும் தீபாவளி - சோகத்தில் பட்டாசு வியாபாரிகள்

ABOUT THE AUTHOR

...view details