வேலை இல்லா திண்டாட்டம் அதிகரித்துக்கொண்டே செல்கிறது என பலர் பேர் கூறுகையில், 2019 டிசம்பரில் சுமார் 12.67 லட்சம் பேருக்கு புதிய வேலை வழங்கப்பட்டுள்ளது என ஊழியர் தேசிய காப்பீட்டுக் கழகத்தின் இ.எஸ்.ஐ.சி(ESIC) தெரிவித்துள்ளது. மேலும் நவம்பர் மாதத்தில் 14.59 லட்சம் பேருக்கு வேலை வழங்கப்பட்டுள்ளது என்றும் அறிவித்துள்ளது.
தேசிய புள்ளி விவர அலுவலகம் என்எஸ்ஓ வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, பதிவு செய்யப்பட்ட புதிய இஎஸ்ஐசி சந்தாதாரர்களின் எண்ணிக்கை 2018-19 நிதியாண்டு முழுவதும் 1.49 கோடி ஆகும்.
செப்டம்பர் 2017 முதல் டிசம்பர் 2019 வரை சுமார் 3.50 கோடி புதிய சந்தாதாரர்கள் ESIC திட்டத்தில் இணைந்தனர் என்றும் அறிக்கை காட்டுகிறது. ESIC, ஓய்வூதிய நிதி நிறுவனம் EPFO மற்றும் ஓய்வூதிய நிதி ஒழுங்குமுறை மேம்பாட்டு ஆணையம் (PFRDA) ஆகியவற்றால் இயக்கப்படும் பல்வேறு சமூக பாதுகாப்பு திட்டங்களின் புதிய உறுப்பினர்களுக்கான சம்பள தரவுகளின் அடிப்படையில் என்எஸ்ஓ அறிக்கை அமைந்துள்ளது.