தமிழ்நாடு

tamil nadu

மாநில முதலமைச்சர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி ஆலோசனை!

By

Published : Jan 13, 2022, 5:27 PM IST

PM
PM ()

நாட்டில் கரோனா பரவல் அசுர வேகத்தில் அதிகரித்துவரும் நிலையில் பிரதமர் நரேந்திர மோடி அனைத்து மாநில முதலமைச்சர்களுடன் காணொலி வாயிலாக ஆலோசனை நடத்தினார்.

டெல்லி : அந்தந்த மாநிலங்களில் உள்ள கோவிட்19 நிலைமையை மதிப்பாய்வு செய்வதற்காக முதலமைச்சர்களுடன் காணொலி வாயிலாக சந்திப்பை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கினார்.

நாட்டில் தீவிரமாக கரோனா பரவல் ஏற்பட்டுள்ள நிலையில் இந்தச் சந்திப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. முன்னதாக இன்று காலை மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள புள்ளி விவர அறிக்கையில், கடந்த 24 மணி நேரத்தில் நாட்டில் 2.50 பேருக்கு கரோனா பாதிப்புகள் இருப்பது தெரியவந்தன.

ஒமைக்ரான் மாறுபாட்டைப் பொறுத்தவரை, மகாராஷ்டிராவில் 1,367 பாதிப்புகளும், ராஜஸ்தானில் 792 பாதிப்புகளும், டெல்லியில் 549 பாதிப்புகளும், கேரளாவில் 486 பாதிப்புகளும், கர்நாடகாவில் 479 பாதிப்புகளும், மேற்கு வங்காளத்தில் 294 பாதிப்புகளும் பதிவாகியுள்ளன.

இதுவரை நடத்தப்பட்ட 69.73 கோடி மொத்த சோதனைகளில், நாட்டில் தினசரி நேர்மறை விகிதம் 13.11 சதவீதம் பதிவாகியுள்ளது. மேலும், வாராந்திர நேர்மறை விகிதம் 10.80 சதவீதமாக உள்ளது. கோவிட்-19 தடுப்பூசி நிலையைப் பொறுத்தவரை, நாடு தழுவிய தடுப்பூசி இயக்கத்தின் கீழ் இதுவரை 154.61 கோடி தடுப்பூசி டோஸ்கள் வழங்கப்பட்டுள்ளன.

முன்னதாக புதன்கிழமை, நிதி ஆயோக் உறுப்பினரான டாக்டர் வி.கே.பால், “கரோனா வைரஸின் ஒமைக்ரான் மாறுபாட்டால் ஏற்படும் தொற்றுநோயை சாதாரண ஜலதோஷமாகக் கருதக்கூடாது, அதை மக்கள் அதை இலகுவாக எடுத்துக் கொள்ளக்கூடாது” என்று எச்சரித்தார் என்பது நினைவு கூரத்தக்கது.

இதையும் படிங்க : ஒமைக்ரான் சாதாரண சளி அல்ல.. நாட்டில் 2.50 லட்சம் பேருக்கு கரோனா!

ABOUT THE AUTHOR

...view details