தமிழ்நாடு

tamil nadu

ரூ. 4 கோடி மதிப்பிலான ஹெராயின் பறிமுதல்

By

Published : Nov 5, 2021, 7:14 AM IST

போதைப்பொருள் பறிமுதல்
போதைப்பொருள் பறிமுதல்

மும்பையில் சுமார் 4 கோடி ரூபாய் மதிப்பிலான 700 கிராம் ஹெராயினை பறிமுதல் செய்த காவல் துறையினர், இருவரை கைது செய்துள்ளனர்.

மும்பையில் போதைப்பொருள்கள் விற்பனை அதிகரித்து வரும் நிலையில், கடத்தல் மற்றும் விற்பனையாளர்களை கண்டறிந்து நடவடிக்கை எடுக்கும் பணியில் போதைப்பொருள் தடுப்பு பிரிவு அலுவலர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், சர்வதேச கொரியர் அலுவலகத்தில் இருந்த 4 கோடி ரூபாய் மதிப்பிலான 700 கிராம் ஹெராயினை அலுவலர்கள் கைப்பற்றினர். இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் விசாரணை நடத்தி வந்தனர்.

விசாரணையில், அந்த போதைப்பொருளுக்கு சொந்தக்காரர் குஜராத் மாநிலம் வதோதரா மாவட்டத்தை சேர்ந்த கிருஷ்ணா முராரி பிரசாத் என்பவரை காவல் துறையினர் கைது செய்தனர்.

முன்னதாக நவ.2 ஆம் தேதி மும்பையிலுள்ள வைல் பார்லேயில் அலுவலர்கள் சோதனை நடத்தியபோது கோடிக்கணக்கான ரூபாய் மதிப்பிலான ஹெராயின் கைப்பற்றியது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க:விடிய விடிய மது விருந்து - குடித்த மூவரும் உயிரிழப்பு!

ABOUT THE AUTHOR

...view details