தமிழ்நாடு

tamil nadu

10ஆவது முறையாக மீண்டும் எவரெஸ்ட்டை அடைந்த லக்பா ஷெர்பா!

By

Published : May 12, 2022, 5:11 PM IST

10 வது முறையாக மீண்டும் எவரெஸ்ட்டை அடைந்த லக்பா ஷெர்பா!
10 வது முறையாக மீண்டும் எவரெஸ்ட்டை அடைந்த லக்பா ஷெர்பா!

எவரெஸ்ட் சிகரத்திற்கு பல முறை சென்று சாதனை படைத்த லக்பா ஷெர்பா என்ற பெண்மணி 10ஆவது முறையாக சிகரத்திற்குச் சென்றுள்ளார். இவருடன் வேறு சிலரும் 8,849 மீட்டர் உயரமுடைய எவரெஸ்ட் சிகரத்தை அடைந்துள்ளனர்.

காத்மண்டு (நேபாளம்):நேபாளத்தைச் சேர்ந்த லக்பா ஷெர்பா பல முறை எவரெஸ்ட் சிகரத்திற்குச் சென்று சாதனைப் படைத்துள்ளார். இந்நிலையில் மீண்டும் எவரெஸ்ட்டிற்கு சென்று அதிக முறை சிகரத்தை அடைந்த அவரது பழைய சாதனையை முறியடித்துள்ளார்.

இந்த முறையோடு லக்பா 10ஆவது முறையாக சிகரத்தை அடைந்துள்ளார். இவருடன் வேறு சிலரும் 8,849 மீட்டர் உயரத்தை தாண்டி சிகரத்திற்குச் சென்றுள்ளனர். சிகரத்திற்குச் செல்ல ஏற்றவாறு காலநிலை இருந்ததால், சற்று எளிதாக சிகரத்தை அடைந்துள்ளதாகத் தெரிவித்துள்ளனர்.

நேபாளத்தைச் சேர்ந்த 48 வயதாகும் பெண்மணியான லக்பா ஷெர்பா முறையான கல்வி கிடைக்காத சூழ்நிலையில் இருந்தவர். அவரது வாழ்வாதாரத்திற்காக மலை ஏறும் சூழ்நிலை அமைந்துள்ளது. இதன் மூலம் அவரால் அனைவரைக் காட்டிலும் சற்று எளிமையாக இருந்துள்ளது. இந்த முறை 10ஆவது முறையாக எவரெஸ்ட் சென்றுள்ளார். மேலும் இதன் மூலம் அதிகமாக எவரெஸ்ட் சென்றடைந்தோர் பட்டியலில் லக்பா முதலிடம் பிடித்துள்ளார்.

லக்பா அவரது குடும்பத்தாருடன் அமெரிக்காவில் உள்ள மேற்கு ஹார்ட்ஃபோர்டில் வசித்து வருகிறார். மேலும் ஷெர்பாவின் வழிகாட்டுதலுடன் இவருடன் காமி ரிட்டாவும் சிகரத்திற்கு சென்று புதிய சாதனைப் படைத்துள்ளார்.

இதையும் படிங்க:Taj Mahal 22 doors case: தாஜ்மஹாலின் 22 அறைகளை திறக்க மறுப்பு!

ABOUT THE AUTHOR

...view details