தமிழ்நாடு

tamil nadu

+2 மாணவியை பாலியல் வன்கொடுமை செய்து வீடியோ பதிவு.. டெல்லி கொடூரம்!

By

Published : Jan 21, 2023, 9:51 AM IST

கோப்புப்படம்

நொய்டா அருகே நண்பர்களால் பல முறை கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட +2 மாணவி தற்கொலைக்கு முயன்ற நிலையில் அவரது சகோதரி காப்பாற்றினார்.

டெல்லி:நொய்டா பகுதியை சேர்ந்த +2 மாணவி, கடந்த ஐந்து மாதங்களாக தனது நண்பர்கள் மூவரால் பல முறை கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டுள்ளார். மேலும் அதனை வீடியோவாக பதிவு செய்த மாணவியின் நண்பர்கள், இந்த சம்பவம் குறித்து யாரிடமாவது கூறினால், வீடியோவை இணையத்தில் பதிவேற்றம் செய்துவிடுவதாக கூறி மிரட்டியுள்ளனர்.

அதோடு மாணவியை குடும்பத்தோடு கொலை செய்துவிடுவதாக மிரட்டிய நண்பர்கள் மூன்று பேரும், அவர்களது நண்பர்களுக்கு மாணவியை விருந்தாக்க நினைத்துள்ளனர். இதனால் மனமுடைந்து போன மாணவி தற்கொலைக்கு முயன்றுள்ளார். இதனைக் கண்டு அதிர்ந்து போன மாணவியில் சகோதரி, துரிதமாக செயல்பட்டு மாணவியை காப்பாற்றியுள்ளார். பின்னர் இந்த விவகாரம் குறித்து பெற்றோரிடம் கூறியுள்ளார்.

இதை கேட்டு அதிர்ச்சிக்குள்ளான மாணவியின் பெற்றோர், மாணவியை இந்த நிலைக்கு ஆளாக்கிய மூன்று பேர் மீது போலீசில் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்த டெல்லி போலீசார், தலைமறைவாக உள்ள மூன்று பேரையும் தனிப்படை அமைத்து தேடி வருகின்றனர். மேலும் இது குறித்து மாணவியிடம் விசாரணை மேற்கொண்டனர்.

விசாரணையில், கூட்டு பாலியல் பலாத்லாரத்தில் ஈடுபட்டது, மாணவியில் சக நண்பர்கள் தான் என்பதும், பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதை அவர்கள் வீடியோவாக பதிவு செய்து மாணவியை மிரட்டி வந்ததும் தெரியவந்தது. மேலும், மாணவியை அந்த மூன்று பேரும் அவர்களது நண்பர்களுக்கு விருந்தாக்க நினைத்த போது அதற்கு மாணவி ஒப்புக்கொள்ளாததால், அவருக்கு கொலை மிரட்டல் விடுத்ததும் தெரியவந்தது.

இந்த சம்பவம் குறித்து கிரேட்டர் நொய்டா காவல்துறை கூடுதல் ஆணையர் தினேஷ் குமார் சிங் கூறுகையில், “ஐந்து மாதங்களாக நண்பர்கள் மூன்று பேரால் தனது மகள் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டுள்ளதாக, அவரது தாய் அளித்த புகாரின் அடிப்படையில் இந்த வழக்கு விராசணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கூட்டு பாலியல் பலாத்காரம் செய்து, அதனை வீடியோ எடுத்து மாணவியை மிரட்டி பல முலை கொடுமை செய்துள்ளனர். மேலும் மாணவியை குடும்பத்தோடு கொலை செய்து விடுவதாக மிரட்டியுள்ளனர். அவர்கள் தேடும் பணியில் காவல்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர். அவர்கள் சிக்கினால் மட்டுமே மேலும் விவரங்கள் தெரிய வரும்” என்றார்.

இதையும் படிங்க: பிரபல மதபோதகர் பாலியல் தொல்லை; நெல்லை ஆட்சியரிடம் இளம்பெண் பகீர் புகார்!

ABOUT THE AUTHOR

...view details