தமிழ்நாடு

tamil nadu

இமாச்சலப் பிரதேசத்தில் ரஷ்யா - உக்ரைன் காதலர்கள் திருமணம்

By

Published : Aug 3, 2022, 10:06 PM IST

இமாச்சல பிரதேசத்தில்  இந்து முறைப்படி திருமணம் செய்து கொண்ட ரஷ்ய-உக்ரேனிய காதலர்கள்

இமாச்சலப் பிரதேசத்தில் ரஷ்யா மற்றும் உக்ரைனை சேர்ந்த காதலர்கள் இந்து முறைப்படி திருமணம் செய்துகொண்டுள்ளனர்.

ரஷ்யா - உக்ரைன் இரு நாடுகளுக்கு இடையே கடந்த சில மாதங்களாக போர் நடந்து வருகிறது. இந்த சூழலில், ரஷ்யாவைச் சேர்ந்த சிர்கி நோவிகா, உக்ரைனைச் சேர்ந்த அலியோனா ப்ரோமோகா என்பவர்கள், இந்தியாவிற்கு வந்துள்ளனர்.

ரஷ்யா - உக்ரைன் காதலர்கள் திருமணம்

இருவரும் கடந்த மூன்று மாதங்களாக இமாச்சலப் பிரதேசம் தர்மசாலா மாவட்டத்தில் தங்கி வந்துள்ளனர். ஆனால் வெவ்வேறு நாடுகள் என தெரியாத இரண்டு நபர்களிடையே காதல் மலர்ந்து காதலித்து வந்துள்ளனர். தங்கள் நாட்டின் சூழ்நிலையைப் பார்த்து, இருவரும் இந்தியாவில் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்துள்ளனர்.

அதன்படி, இருவரும் தர்மசாலா மாவட்டத்தில் உள்ள கோயிலில் இந்து முறைப்படி திருமணம் செய்து கொண்டுள்ளனர். இந்த சம்பவம் அனைவரையும் நெகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

இதையும் படிங்க:இளைஞரை கொடூரமாக கொலை செய்த கும்பல் - பதறவைக்கும் சிசிடிவி

ABOUT THE AUTHOR

...view details