டெல்லி:மெட்ரோ ரயிலில் மதுபாட்டில்கள் உள்ளிட்டவைகளை கொண்டு செல்வதற்கு பயணிகளுக்கு அனுமதி மறுக்கபட்டிருந்தது. இந்த நிலையில், பயணத்தின்போது மதுபாட்டில்களை கொண்டு செல்ல அனுமதிக்க வேண்டும் என்று பல்வேறு தரப்பிலிருந்தும் கோரிக்கைகள் எழுந்தவண்ணம் இருந்தன.
இதனையடுத்து, டெல்லி மாநகரின் அனைத்து பகுதிகளிலும் மெட்ரோவில் பயணிக்கும் பயணிகளுக்கு இதற்கான அனுமதி வழங்குவது குறித்து டெல்லி மெட்ரோ நிர்வாகம் தரப்பில் பரிசீலிக்கப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இதைத்தொடர்ந்து,மதுபாட்டில்களை பாதுகாப்பான முறையில் கொண்டு செல்வதற்கு டெல்லி மெட்ரோ நிர்வாகம் அனுமதி அளித்துள்ளது (Delhi Metro allows liquor bottles) அனைவரிடமும் வரவேற்பைப் பெற்றுள்ளது.
இதையும் படிங்க: ஆன்லைன் செய்தி சட்டம் எதிரொலி - கனடாவில் உள்ள செய்தி இணைப்புகளை நீக்க கூகுள் திட்டம்
டெல்லி மெட்ரோவில் ஏர்ப்போர்ட் எக்ஸ்பிரஸ் வழித்தடத்தை தவிர, பிற பகுதிகளில் மதுபாட்டில்களை எடுத்து செல்வதற்கு தடை விதிக்கப்பட்டிருந்தது. இது தொடர்பாக, டிஎம்ஆர்சியின் (Delhi Metro Rail Corporation - DMRC) சிஐஎஸ்எஃப் மற்றும் டிஎம்ஆர்சி அதிகாரிகள் அடங்கிய குழு பட்டியலை மதிப்பாய்வு செய்யும் பணியில் ஈடுபட்டிருந்தனர். இதனையடுத்து, அக்குழுவின் பரிந்துரையின் படி திருத்தப்பட்ட விதிமுறைகளின் அடிப்படையில் ஒரு நபருக்கு இரண்டு சீல் செய்யப்பட்ட மதுபாட்டில்கள் கொண்டு செல்ல அனுமதிக்கப்படுவதாக டெல்லி மெட்ரோ நிர்வாகம் தெரிவித்துள்ளது.