தமிழ்நாடு

tamil nadu

இந்து இளைஞரை திருமணம் செய்துகொண்ட இஸ்லாமிய பெண்ணுக்கு கொலைமிரட்டல்

By

Published : Nov 23, 2022, 6:59 PM IST

இந்துவை திருமணம் செய்துகொண்ட இஸ்லாமிய பெண்ணுக்கு கொலைமிரட்டல்
இந்துவை திருமணம் செய்துகொண்ட இஸ்லாமிய பெண்ணுக்கு கொலைமிரட்டல் ()

பிகார் மாநிலத்தில் இந்து மதத்தை சேர்ந்தவரை திருமணம் செய்துகொண்ட இஸ்லாமிய பெண்ணுக்கு அவரது குடும்பத்தார் கொலை மிரட்டல் விடுத்துள்ளனர்.

பாட்னா: பிகார் மாநிலம் பாகல்பூர் மாவட்டத்தில் இந்து மதத்தை சேர்ந்தவரை காதலித்து திருமணம் செய்துகொண்ட இஸ்லாமிய பெண்ணுக்கு அவரது குடும்பத்தார் கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். பாகல்பூரை சேர்ந்த ராம் குமார், முஸ்கன் கட்டூன் இருவரும் ஒரு வருடமாக காதலித்துவந்தனர். இருவரும் வெவ்வேறு மதத்தை சேர்ந்தவர்கள் என்பதால் பெண் வீட்டில் எதிர்ப்பு கிளம்பியது. இதனால் முஸ்கன் கட்டூன் அக்டோபர் 18ஆம் தேதி வீட்டைவிட்டு வெளியேறி ராம் குமார் வீட்டிற்கு சென்றார்.

அங்கு ராம் குமாரின் பெற்றோர் சம்மதத்துடன் இருவருக்கும் திருமணம் நடந்தது. இந்த திருமணத்துக்கு பின்பும் முஸ்கன் கட்டூன் குடும்பத்தார் தொடர்ந்து கொலை மிரட்டல் விடுத்துவந்துள்ளனர். இதனால் ராம் குமார், முஸ்கன் கட்டூன் இன்று (நவம்பர் 23) பாகல்பூர் நீதிமன்றத்தை நாடியுள்ளனர். தங்களுக்கு பாதுகாப்பு வழங்குமாறு கோரிக்கை வைத்துள்ளனர்.

இதுகுறித்து முஸ்கன் கட்டூன் கூறுகையில், "எனது விருப்பத்தின்பேரிலேயே நான் திருமணம் செய்துகொண்டேன். இந்த திருமணத்தை எனது குடும்பத்தார் ஏற்கத் தயாராக இல்லை. தொடர்ந்து கொலை மிரட்டல் விடுத்துவருகிறார்கள். நாங்கள் பாதுகாப்பாக இருப்பதாக உணரவில்லை. எங்கள் உயிருக்கு ஆபத்து உள்ளது. இதனால் நீதிமன்றத்தை நாடியுள்ளோம்" எனத்தெரிவித்தார்.

இதையும் படிங்க:என்னை துண்டு துண்டுடாக வெட்டப்போவதாக மிரட்டினார்... ஷ்ரத்தாவின் புகார் கடிதம்...

ABOUT THE AUTHOR

...view details