தமிழ்நாடு

tamil nadu

ஒடிசாவில் ஆட்டோ மீது லாரி மோதிய விபத்து... 5 பேர் உயிரிழப்பு

By

Published : Aug 28, 2022, 12:38 PM IST

Updated : Aug 28, 2022, 12:44 PM IST

Etv Bharatஒடிசாவில் ஆட்டோ மீது லாரி மோதியது - 5 பேர் உயிரிழப்பு
Etv Bharatஒடிசாவில் ஆட்டோ மீது லாரி மோதியது - 5 பேர் உயிரிழப்பு

ஒடிசா மாநிலத்தில் இன்று (ஆகஸ்ட் 28) அதிகாலைப்பகுதியில் ஆட்டோ மீது லாரி நேராக மோதியதில் 5 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

ஒடிசா: ஒடிசா மாநிலம், தேன்கால் மாவட்டத்தில் உள்ள காமக்ஷியநகர் சாலைப்பகுதியில் இன்று (ஆகஸ்ட் 28) அதிகாலை நடந்த சாலை விபத்தில் 15 வயதுகுட்பட்ட குழந்தை உட்பட 5 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். பங்குரா கிராமத்தைச் சேர்ந்த பயணிகள் சிலர் ஆட்டோவில் வந்து கொண்டிருந்தபோது, எதிர்பாராதவிதமாக அவர்களின் வாகனம் நிலக்கரி ஏற்றிச்சென்ற லாரி மீது மோதியது.

இந்த விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த அனந்த் சமல், பிரஹலாத் சமல், அடிகண்ட் சமல், அங்கூர் சமல் மற்றும் அவரது மகன் திப்யரஞ்சன் சமல் ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். லாரியை ஓட்டிய டிரைவர் வாகனத்தை அந்த இடத்திலேயே விட்டுவிட்டு தப்பியோடியதாக கூறப்படுகிறது.

இது குறித்து காமக்ஷியநகர் போலீசார் இரண்டு வாகனங்களையும் பறிமுதல் செய்து விசாரணையைத் தொடங்கினர்.

இதையும் படிங்க:இந்தியாவில் தகர்க்கப்படும் மிகப்பெரிய கட்டடங்கள்... 5,000 குடியிருப்புவாசிகள் வெளியேற்றம்...

Last Updated :Aug 28, 2022, 12:44 PM IST

ABOUT THE AUTHOR

...view details