தமிழ்நாடு

tamil nadu

நடத்தையில் சந்தேகப்பட்டு மனைவி, மகனை கொலை செய்த நபருக்கு இரட்டை ஆயுள் தண்டனை!

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jan 31, 2024, 1:58 PM IST

Chennai Women Court
சென்னை மகளிர் நீதிமன்றம்

Chennai Women’s Court: நடத்தையில் சந்தேகப்பட்டு மனைவியையும், அவரது 7 வயது மகனையும் கொலை செய்த கணவருக்கு இரட்டை ஆயுள் தண்டனையும், ரூ. 20 ஆயிரம் அபராதமும் விதித்து சென்னை மகளிர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

சென்னை:புது வண்ணாரப்பேட்டையச் சேர்ந்த குணசுந்தரியின் கணவர் இறந்தநிலையில் ஆந்திராவைச் சேர்ந்த டேஞ்சர் டேவிட் என்பவரைக் காதலித்து இரண்டாவதாக மணமுடித்தார். மனைவியின் நடத்தையில் சந்தேகப்பட்ட டேவிட், கடந்த 2014ஆம் ஆண்டு நவம்பர் மாதம் ஏற்பட்ட தகாராறில் குணசுந்தரியையும், அவரது 7 வயது மகனையும் கத்தியால் குத்தி கொலை செய்தார். தடுக்க வந்த குணசுந்தரியின் தாயார் நாகவள்ளியையும் தாக்கி காயப்படுத்தினார்.

இந்த சம்பவம் குறித்து வண்ணாரப்பேட்டை காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு, டேவிட்டை போலீசார் கைது செய்தனர். இந்த வழக்கு சென்னை சென்ட்ரல் அல்லிகுளம் வளாகத்தில் உள்ள மகளிர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.

தற்போது இந்த வழக்கு நீதிபதி டி.எச்.முகமது பாரூக் முன்னிலையில் நேற்று(ஜன.30) விசாரணைக்கு வந்தது. அப்போது காவல்துறை தரப்பில், சிறப்பு அரசு வழக்கறிஞர் ஆரத்தி பாஸ்கரன் ஆஜராகி வாதாடினார். வழக்கை விசாரித்த நீதிபதி, டேவிட்க்கு இரட்டை ஆயுள் தண்டனையும், 20 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து உத்தரவிட்டார்.

இதையும் படிங்க:துணை மருத்துவ கவுன்சில் தலைவர்களை 2 மாதங்களில் நியமிக்கவும் - சென்னை உயர்நீதிமன்றம்

ABOUT THE AUTHOR

...view details