சென்னை:சென்னையிலிருந்து மும்பை செல்லும் தனியார் பயணிகள் விமானம், நேற்று நள்ளிரவு சென்னை உள்நாட்டு விமான நிலையத்திலிருந்து புறப்படத் தயாரானது. அந்த விமானத்தில் பயணிக்க வந்த பயணிகளின் உடைமைகளைப் பாதுகாப்பு அதிகாரிகள் ஸ்கேன் மூலம் பரிசோதித்து அனுப்பிக் கொண்டு இருந்தனர்.
அப்போது, மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த விக்கி ஜெகதீஷ் பாத்தியா (48) என்ற பயணியின், கையில் எடுத்துச் செல்லும் பையை (Hand bag)பாதுகாப்பு அதிகாரிகள் வாங்கி பரிசோதித்தனர். அப்போது அந்தப் பையில் பிஸ்கட்கள் மற்றும் துணிகள் மற்றும் மட்டுமே இருப்பதாக அந்த மும்பை பயணி கூறினார்.
ஆனாலும், மத்தியத் தொழில் பாதுகாப்புப் படை அதிகாரிகள் சந்தேகத்தில் அந்தப் பையை ஸ்கேன் செய்து பார்த்தபோது, அதற்குள் கட்டுக் கட்டாகப் பணம் இருப்பது தெரிய வந்தது. இதை அடுத்து அந்தப் பையைத் திறந்து பார்த்த சோதித்த போது, பையின் அடிப்பாகத்தில், லைனிங் துணிகளால் ரகசிய அறை இருந்ததைக் கண்டுபிடித்தனர்.
அந்த ரகசிய அறைக்குள் 13 பார்சல்கள் இருந்தன. அந்த பார்சல்களில் அமெரிக்க டாலர் மற்றும் சவுதி ரியால் போன்ற வெளிநாட்டு பணம் பெருமளவு இருந்தன. இதை அடுத்துப் பாதுகாப்பு அதிகாரிகள் அந்தப் பயணியின் மும்பை பயணத்தை ரத்து செய்தனர்.