செஞ்சியில் இருசக்கர வாகனம் திருட்டு; சிசிடிவி காட்சி
விழுப்புரம்: செஞ்சி தேசூர்பாட்டையில் வசித்து வருபவர் கண்ணன். நேற்று இரவு தனது வீட்டின் முன் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இருசக்கர வாகனம் மாயமானது. இதனையடுத்து வீட்டில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமராவில் பார்த்த போது மர்ம நபர் ஒருவர் இருசக்கர வாகனத்தை திருடி செல்வது தெரியவந்தது. இது தொடர்பான புகாரின் பேரில் போலீசார் மர்ம நபரை தேடி வருகின்றனர்.