திருவண்ணாமலை விசாரணை கைதி மரணம்; கொலை வழக்கு பதிய நாம் தமிழர் வலியுறுத்தல்
திருவண்ணாமலை தண்டராம்பட்டு அருகேயுள்ள தாட்டரணை கிராமத்தை சேர்ந்த தங்கமணி என்பரை சாராய விற்பனையில் ஈடுபட்டதாக கூறி விசாரிப்பதாக காவல் துறையினர் கடந்த 26ஆம் தேதி காலையில் அழைத்து சென்று 27ஆம் தேதி இறந்து விட்டதாக தெரிவித்தனர். அவரது மரணத்தில் சந்தேகம் இருப்பதாக கூறி காவல்துறையினர் மீது உடனடியாக கொலை வழக்குப்பதிவு செய்து தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுக்க கோரி வாணியம்பாடியில் நாம் தமிழர் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர்.