மாநில அரசின் முடிவுகளில் ஆளுநர் தலையீடு இருக்க கூடாது - ராகுல் காந்தி
தமிழ்நாட்டின் நீலகிரி மாவட்டம் கூடலூரில் நடந்த கூட்டத்தில் பேசிய காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி, மத்தியில் ஆட்சி செய்யும் மோடி அரசு பாஜக ஆட்சி அல்லாத மாநிலங்களின் ஆளுநர்களை வைத்து அம்மாநிலங்களுக்கு இடையூறு ஏற்படுத்திவருகிறது. மாநில அரசுகளின் முடிவுகளில் ஆளுநர்களின் தலையீடு இருக்க கூடாது என்று தெரிவித்தார்.