விருதுநகர் மின் கம்பங்களை சரி செய்ய மக்கள் கோரிக்கை!
விருதுநகர்: செங்கோட்டை ஊராட்சி சமத்துவபுரம் பகுதியில் 100க்கும் மேற்ப்பட்ட குடும்பங்கள் வசிக்கின்றன. இந்தக் குடியிருப்புகளுக்கு மின் இணைப்புக்காக 20 ஆண்டுகளுக்கு முன்பு மின்கம்பங்கள் அமைக்கப்பட்டன. சுமார் 10க்கும் மேற்ப்பட்ட மின்கம்பங்கள் தற்போது பலத்த சேதமடைந்துள்ளன. எந்த நேரத்திலும் சாய்ந்து விழும் அவல நிலையும் உள்ளது. இதுகுறித்து, பஞ்சாயத்து நிர்வாகம் பலமுறை மாவட்ட நிர்வாகத்திடமும் , யூனியன் அலுவலகத்திலும் பல மனு கொடுத்தும் எந்த பலனுமில்லை எனவும் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கூறி அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்தனர்.