'எனக்கு மட்டும் அதிகாரம் இருந்தால் தமிழ் அறிஞர்களுக்கு பத்மபூஷண் விருது வழங்கியிருப்பேன்' - அமைச்சர் துரைமுருகன்
![ETV Thumbnail thumbnail](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/320-214-15168643-thumbnail-3x2-mini.jpg)
திருப்பத்தூர்: வாணியம்பாடியில் 29ஆம் ஆண்டு முத்தமிழ் மன்ற இலக்கிய நவரசத் திருவிழா இரண்டு நாள்கள் நடைபெறுகிறது. அதில் பல்வேறு தமிழ் இலக்கிய தலைப்புகளில் அறிஞர்கள், பேச்சாளர்கள் தலைமையில் விழா நடைபெற்று வருகிறது. இதில் பங்கேற்று பேசிய நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், “எனக்கு மட்டும் அதிகாரம் இருந்தால் வாணியம்பாடியில் படித்த கவிகோவிற்கும் பல தமிழ் அறிஞர்களுக்கும் பத்மபூஷண் விருது வழங்கியிருப்பேன்” என்றார்.