விருதுநகர்: அருப்புக்கோட்டை அருகே திருச்சுழி சொக்கம்பட்டியை சேர்ந்தவர் சோலைமலை. கடந்த 30 ஆண்டுகளாக விவசாயம் செய்து வருகிறார். சோலைமலை விவசாயத்துடன் சேர்த்து ஆடு, மாடு கோழிகள் உள்ளிட்ட கால்நடைகளையும் வளர்த்துவருகிறார். இவர் வளர்த்துவரும் கோழி ஒன்று நான்காவது முறையாக பத்து முட்டைகள் போட்டது. அதில் அதிசயமாய் ஒரு கோழிக்குஞ்சு மட்டும் நான்கு கால்களுடன் பிறந்து ஆரோக்கியமாகவே உள்ளது.