நெய்வேலி என்எல்சி விரிவாக்கம்: மக்களவையில் பேசிய திருமாவளவன்.. அனுமதி மறுத்த சபாநாயகர்..
மக்களவையில் பருவநிலை மாற்றம் மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு தொடர்பாக நேற்று (மார்ச் 21) விவாதம் நடைபெற்றது. இதில், பங்கேற்று பேசிய விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர், தொல். திருமாவளவன் (சிதம்பரம் தொகுதி எம்.பி) , கடல்நீர் மட்டம் உயர்வதால் ஏற்படக்கூடிய பாதிப்புகளில் இருந்து மக்களை பாதுகாக்க வேண்டும். கடலோரத்தில் புதிய கட்டுமானங்களுக்கு அனுமதி அளிக்கக்கூடாது" என்று வலியுறுத்தினர். மேலும், நெய்வேலி நிலக்கரிச் சுரங்க விரிவாக்கத்திற்கு எதிராகக் கேள்வி எழுப்ப திருமாவளவன் முயன்றார். அதற்கு அனுமதி மறுத்த சபாநாயகர், இந்த விவகாரம் குறித்து நீங்கள் ஏற்கனவே பேசியதாக தெரிவித்தார்.
Last Updated : Feb 3, 2023, 8:21 PM IST