உக்ரைனில் சிக்கிய திருவாரூர் மாணவி!
![ETV Thumbnail thumbnail](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/320-214-14579883-thumbnail-3x2-tvrr.jpg)
திருவாரூர்: குடவாசல் அருகே உள்ள விஷ்ணுபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் வைத்தியநாதன். இவர்களது மகள் அபிராமி. இவர் உக்ரைனில் இரண்டாம் ஆண்டு மருத்துவ பட்டப்படிப்பு படித்துவருகிறார். இந்நிலையில் தற்போது மாணவி தங்கியுள்ள பார்டர் கார்க்யூவில் போர் நடைபெற்றுவருவதால் மகளை மீட்டுத்தர நடவடிக்கை எடுக்கக்கோரி, மாவட்ட ஆட்சியரிடம் அபிராமியின் பெற்றோர் கண்ணீர் மல்க கோரிக்கை மனு அளித்துள்ளனர். மேலும் அங்குள்ள நிலவரம் குறித்து மாணவி அபிராமி காணொலி பதிவொன்றை வெளியிட்டுள்ளார்.
Last Updated : Feb 3, 2023, 8:17 PM IST