உண்டியல் பணத்தைக் கொடுத்து ஸ்டாலினை நெகிழவைத்த சிறுமி!
செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டங்களில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட இடங்களை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நேற்று (டிசம்பர் 7) ஆய்வுசெய்தார். அப்போது பழைய பெருங்களத்தூரைச் சேர்ந்த ஐந்தாம் வகுப்பு மாணவி இலக்கியா, கடந்த ஒரு ஆண்டாக உண்டியலில் சேமித்துவைத்த பணத்தை மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுமாறு ஸ்டாலினிடம் கொடுத்தார். இதனைப் பெற்றுக்கொண்ட அவர், சிறுமியை நெகிழ்ந்துப் பாராட்டினார்.