கத்திமுனையில் ரூ.38 ஆயிரம் கொள்ளை: குற்றவாளிகளுக்கு வலை!
விழுப்புரம் மாவட்டம் சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் தனியார் பெட்ரோல் சேமிப்பு நிலையம் இயங்கிவருகிறது. இங்கு, நேற்று இரவுப் பணியிலிருந்த புதுப்பாக்கம் பகுதியைச் சேர்ந்த சுரேஷ் (24), எறையானூர் பகுதியைச் சேர்ந்த செந்தில்குமார் (38) ஆகியோரை மிரட்டி அவர்களிடமிருந்து 38 ஆயிரம் ரூபாயை கொள்ளையடித்துச் சென்றனர். இச்சம்பவம் குறித்து கண்காணிப்புக் கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து குற்றவாளிகளைக் காவல் துறையினர் தீவிரமாகத் தேடிவருகின்றனர்.