பாலாற்று வெள்ளத்தில் அடித்துச்செல்லப்பட்ட நகராட்சி பம்ப் ஆப்பரேட்டர் - பதைப்பதைக்கும் வீடியோ
காஞ்சிபுரம் குருவிமலை பாலாற்றில் இருக்கக்கூடிய நீர் மோட்டாரை இயக்க சென்ற சின்னையங்குளம் பகுதியைச் சேர்ந்த மாநகராட்சி பம்ப் ஆப்பரேட்டர் கருணா (54) என்பவர் எதிர்பாராத விதமாக வெள்ளப்பெருக்கில் சிக்கிக்கொண்டார். மேலும் வெள்ளம் அதிகமாகச் சென்றதால் மீட்புத்துறையினராலும் அவரை மீட்க முடியவில்லை. வெள்ள நீரில் அடித்துச் செல்லப்பட்டவர் நிலைகுறித்து இதுவரை எவ்வித தகவலும் தெரியாததால் அவரது குடும்பமே சோகத்தில் ஆழ்ந்துள்ளது.