கரோனா பரவல்: கொடிவேரி அணைக்கு வர சுற்றுலாப் பயணிகளுக்குத் தடை
ஈரோடு: கோடை வெயிலின் தாக்கத்தைத் தாங்க முடியாமல், கொடிவேரி அணைக்கு தினந்தோறும் ஆயிரக்கணக்கான மக்கள் வந்து அருவியில் குளித்து மகிழ்ந்தனர். தற்போது, கரோனா பரவல் அதிகரித்து வருவதால், கொடிவேரி அணை பூங்கா வரவும், அருவியில் குளிக்கவும் மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ளது. மறுஅறிவிப்பு வரும் வரை இந்தத் தடை தொடரும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.