ஒகேனக்கல் அருவிக்கு நீர்வரத்து 25,000 கன அடியாக அதிகரிப்பு

By

Published : Nov 6, 2021, 3:49 PM IST

thumbnail

கர்நாடக மாநில பகுதிகள் மற்றும் தமிழ்நாடு பகுதிகளில் பெய்துவரும் மழையின் காரணமாக ஒகேனக்கல் காவிரி ஆற்றில் இன்று(நவ.05) திடீரென நீர்வரத்து அதிகரித்துள்ளது. தமிழ்நாடு, கர்நாடகாவில் பெய்துவரும் தொடர் மழை காரணமாக ஒகேனக்கல் காவிரி ஆற்றில் இன்று(நவ.05) நீர்வரத்து அதிகரித்துள்ளது. நேற்று(நவ.06) ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து 10 ஆயிரம் கன அடியாக இருந்தது, இன்று 15 ஆயிரம் கன அடி நீர் அதிகரித்து, நீர் வரத்து 25000 கன அடியாக உயர்ந்துள்ளது. இதன் காரணமாக ஒகேனக்கல் அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்துக் கொட்டுகிறது. ஒகேனக்கல் மெயின் அருவியில் சுற்றுலாப் பயணிகள் குளிக்க மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ளது. தீபாவளி பண்டிகை தொடர் விடுமுறை காரணமாக ஒகேனக்கலில் வெளி மாநில மற்றும் வெளி மாவட்டங்களை சேர்ந்த சுற்றுலாப் பயணிகள் குவிந்துள்ளனர்.

ABOUT THE AUTHOR

author-img

...view details

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.