கடம்பூர் மலைப்பகுதியில் பெருக்கெடுத்து ஓடிய வெள்ளம்
![ETV Thumbnail thumbnail](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/320-214-9132568-thumbnail-3x2-river.jpg)
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தை அடுத்துள்ள கடம்பூர் மலைப்பகுதியில் நேற்று இரவு முதல் பெய்த மழை காரணமாக வனப்பகுதியில் உள்ள குரும்பூர் பள்ளத்தில் செந்நிற மழை நீர் கரை புரண்டு ஓடியது. இதனால் மேய்ச்சலுக்கு சென்ற பத்துக்கும் மேற்பட்ட மாடுகள் நீரில் இறங்கி செல்லும் அவலம் ஏற்பட்டது.