VIRAL VIDEO: ஐஜியைப் பார்த்து 'என்னமா கண்ணு சௌக்கியமான்னு' கேட்ட எஸ்பி
கோயம்புத்தூர்: காவலர் பயிற்சிப் பள்ளியில் ஆயுதப்படை நிறைவு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு மேற்கு மண்டல ஐஜி சுதாகரும் கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செல்வ நாகரத்தினமும் சிறப்பு விருந்தினர்களாகப் பங்கேற்றனர். இந்நிகழ்ச்சியில் இசைக்கச்சேரி நடைபெற்றது. இந்நிலையில் சிறப்பு விருந்தினராக வந்த இருவரும் 'என்னமா கண்ணு சௌக்கியமா' என்ற பாடலைப் பாடி அசத்தினர். தற்போது இப்பாடல் சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவிவருகிறது.