ராஜபாளையத்தில் 100 சதவீதம் வாக்களிக்க வலியுறுத்தி ரத ஊர்வலம்!
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் 100 சதவீதம் வாக்களிக்க வலியுறுத்தி விழிப்புணர்வு ரத ஊர்வலத்தை மாவட்ட ஆட்சியர் கண்ணன் கொடியசைத்து தொடங்கிவைத்தார். காவல்துறையினர் இருசக்கர வாகனத்தில் பதாகைகள் ஏந்தி முக்கிய வீதி வழியாக பழைய பேருந்து நிலையம், காந்தி சிலை, காந்தி கலைமன்றம், பஞ்சு மார்க்கெட் வரை ஊர்வலமாக சென்றனர்.