15 ஆவது நாளாக முழுகொள்ளளவுடன் நீடிக்கும் பவானிசாகர்
ஈரோடு : வடகேரளாவில் பெய்த பலத்த மழை காரணமாக பவானிசாகர் அணைக்கு நீர் வரத்து அதிகரித்ததால் நவம்பர் எட்டாம் தேதி அணையின் நீர்மட்டம் முழுகொள்ளளவான 105 அடியை எட்டியது. அணைக்கு உபரிநீர் தொடர்ந்து வருவதால் 15 வது நாளாக அணை முழுகொள்ளளுவுடன் உள்ளது. இன்று காலை நிலவரப்படி அணைக்கு நீர்வரத்து விநாடிக்கு 3614 கனஅடியாக உள்ளது. அணையின் நீர் மட்டம் ஒரே சீராக நிலை நிற்பதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
Last Updated : Nov 22, 2019, 4:46 PM IST