பயிற்சிக்கு திரும்பிய பார்சிலோனா வீரர்கள்!
கோவிட்-19 பெருந்தொற்று காரணமாக வீட்டிலேயே சுய தனிமைப்படுத்துதலை மேற்கொண்டிருந்த பார்சிலோனா கால்பந்து வீரர்கள், பத்து வார இடைவெளிக்கு பின், மீண்டும் பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர். இதில், கால்பந்து விளையாட்டின் நட்சத்திர வீரர் லியோனல் மெஸ்ஸி உள்பட, சக பார்சிலோனா அணி வீரர்கள் தங்களது குழு பயிற்சிகளை மேற்கொள்ளும் காணொலி தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.